Wednesday, December 29, 2010

பென்சில் எப்படி தயாரிக்கபடுகிறது

நாம் தினமும் உபயோகிக்கும் பொருள்களை எப்படி தயார் செய்ய படுகிறது என்று பார்த்தால் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இதோ நாம் தினம் தினம் உபயோகிக்கும் பென்சில் மற்றும் ரப்பர் தயாரிப்பு குறித்த வீடியோ தகவல் உங்களுக்காக. இன்று ஒரு தகவல் போல இதை எடுத்து கொள்வோம்.
ஒரு பென்சில் 35 மைல் நீளத்துக்கு கோடு போட முடியும் .
35 மைல் = 56.32704 கிலோமீட்டர்
1 மைல் = 1.609344 கிலோமீட்டர்

பென்சில் தயாரிப்பு


ரப்பர் தயாரிப்பு

Tuesday, November 30, 2010

அஜித் ஹிட் பாடல்கள் !!

அஜித் ஹிட் பாடல்கள் என்று யூடுயூப்இல் தேடினால் ஒண்ணுமே வரல. அது ஏன் என்று எல்லாருக்குமே தெரியும். அஜித்க்கும் பாடல்களுக்கும் ஏழாம் பொருத்தம். அஜித்க்கு ஏ அர் ரகுமான் இசையமைத்தால் கூட பாடல்கள் தேற மறுக்கின்றனர். அது ஏன் என்று தான் தெரியவில்லை.  இத்தனைக்கு விஜய்க்கு எந்த இசை அமைப்பாளர் பாடல் போட்டாலும் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் வண்ணம் நன்கு அமைந்து விடுகிறது. பாடல்கள் நன்றாக இல்லை என்றால் கூட அவர் நடனத்தில் பாடல்கள் ஹிட் ஆகும் வாய்ப்பு இருக்கிறது .அது அவருடையோ அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.  அந்த வாய்ப்பு இங்கு இல்லை. அது மட்டும் இல்லை நல்ல பாடல்கள் கூட இவர்க்கு நடனம் நன்கு வராது என்று சுமார் என்று ஆன பாடல்கள் உண்டு . ஒரு படத்தின் வெற்றியை பாடல்கள் தீர்மானிப்பதை இங்கு நீங்கள் காணலாம்.
விஜய் ஹிட் பாடல்கள் என்றால் ஒரு 50 முதல் 100 பாடல்கள் வந்து நிற்கும். இதுவே அஜித் என்பதால் 10 பாடல்கள் தேடுவதற்கு ஒரு மணி நேரம் ஆகி விட்டது. இதோ எனக்கு பிடித்த அஜித்இன் ஹிட் பாடல்கள் ( நான் கேட்கும் பாடல்கள் என்று கூட சொல்லலாம் )

பில்லா - சேவல் கொடி


உல்லாசம் - யாரோ யார் யாரோ


தீனா படத்தின் பாடல்கள் - வத்தி குச்சி


அமர்க்களம் பாடல்கள் - மேகங்கள் என்னை தொட்டு


வில்லன் - ஒரே மணம்


முகவரி - ஏ நிலவே


ரெட் - கண்ணை கசக்கும் சூரியனோ


கிரிடம் - கனவெல்லாம் பலிக்குதே


கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - சந்தன தென்றலை


ஆசை - கொஞ்ச நாள் பொறு தலைவா


காதல் கோட்டை - நலம் நலமறிய ஆவல்


காதல் மன்னன் பாடல்கள் - உன்னை பார்த்த பின்பு நான்


இதில் எதாவது பாடல்கள் விட பட்டு இருந்தால் பின்னூட்டம் போடவும்.

Tuesday, November 23, 2010

நந்தலாலா - இது ஒரு மிஷ்கின் படம்

நந்தலாலா ... இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவர வேண்டிய திரைப்படம். இப்போது தான் திரைக்கு வருகிறது. மிஷ்கின் மிக நல்ல டைரக்டர் என்று சொல்லுவதற்கு முன் .. அவர் எடுத்த இரண்டு படம் மிக பெரிய ஹிட .. முதல் படம் சித்திரம் பேசுதடி. இரண்டவது அஞ்சாதே .. அவருடைய திரைக்கதை மற்றும் காட்சி அமைப்பு மிக அருமையாக இருக்கும். இளையராஜா இசை வேற.. திரை அரங்கம் வந்து படம் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த படம்.
சென்ற வாரம் இவர் ஒரு சர்ச்சையில் சிக்கினர். உதவி இயக்குனரை பற்றி தவறாக பேசினார் என்பது தான். ஏற்கனவே கேபிள் சங்கர் சொன்னது போல அவர் சொன்னதில் தப்பு இல்லை, சொன்ன விடம் தான் தவறு.

மிஷ்கின் பற்றி சிறு செய்திகள் .
இயக்குனர் அவதற்கு முன் 72 வேலை செய்துள்ளார்.
கடைசியாக லேண்ட்மார்க் - புத்தக கடையில் வேலை பார்க்கும் பொது இயக்குனர் கதிர் ( அதாங்க நம்ம காதலர் தினம், காதல் தேசம படைப்பாளி ) கிட்ட நிறைய புத்தங்களை எடுத்து கொடுத்து , இது படிங்க அது படிங்க என்று சொல்லி, அப்புறம் உதவி இயக்குனராக பணிக்கு சேர்ந்தார்.
புத்தகம் படிக்கும் ஆர்வலர். நாவல் படிப்பது போன்று இவரது படங்கள் இருக்கும்.
வாழ்வில் நெளிவு சுழிவு பார்த்தவர். பேச்சு மிக ஜாஸ்தி , மத்தபடி அவரிடம் சரக்கு இருக்கிறது.
உதவி இயக்குனராக ஒரு திருநங்கை சேர்த்து உள்ளார் என்பது ஒரு கொசுறு தகவல். உலக தரத்துக்கு படத்தை கொடுக்க வல்லவர்.
கதிர்டம் வேலை செய்யும் போது தான் கானா உலகநாதன் அங்கு கதிரிடம் வாய்ப்பு கேட்டு பாடி இருக்கிறார். அவரை சித்திரம் பெசுதடியில் உபயோக படுத்தி இருப்பார்.
அவரே வருத்த பட்டு கூறிய விஷயம் - " என்னை குத்து பாட்டு ச்பெசியாளிஸ்ட் என்று சொல்லி விட்டனர் " காரணம் வாழமீனு மற்றும் கத்தால கண்ணால பாடல்கள் தான்.
அஞ்சாதே படம் டைட்டில் போடும் அழகே தனி .. அதை பார்த்தே நான் இவரது ரசிகன் ஆனேன்.

Thursday, November 11, 2010

இன்னுமா இந்த உலகம் நம்புது..

ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி முன்பே எழுத வேண்டும் என்று நினைத்தேன். இப்போது பிரச்சனை மிக பிரமாண்டமாக வெடித்து இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் அப்படி என்றால் என்ன ? என்று கூட சில பேர் கேட்பார்கள. ஒன் இல்லை ரெண்டு இல்லை 1,76,00,000  கோடி ரூபாய் ஊழல். யார் பணம் இது எல்லாம் மக்கள் பணம். யார் வந்து கேட்க போறாங்க ? என்ற அலட்சிய போக்கில் அடித்த கொள்ளை.
 1,76,00,000 கோடி - 17,60,00,00,00,00,000 முடியல . பார்போம் எதிர் கட்சிகள் ஒரே முடிவாக உள்ளனர்.

அதாவதுமுன்பு எல்லாம் ஊழல் என்பது எதோ சில கோடிகளில் நடக்கும் இப்போது எல்லாம் ஆயிரம், லட்சம் கோடி ஊழல் வந்து விட்டது.

மக்கள் பணத்தை எப்படி எல்லாம் சுருட்டலாம் என்று திட்டம் தீட்டி செயல்படுகின்றனர். இதில் ஒரு பகுதியை மக்களுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தால் நாடு எங்கயோ போய் இருக்கும். ( முதல்வன் பட வசனம் தான் )


கிரிகெட் ல  ஊழல்,  தடகள போட்டிகளில் ஊழல் ( காமண் விலத் போட்டி) , வீடு கட்டினா ஊழல் ( அதர்ஸ் வீடு வசதி ) , பாலம் கட்டின ஊழல், வெள்ள நிவரனத்து, சுடுகாட்டு கூரை வரைக்கும்  ஊழல் நிறைந்த நாடாக் இந்திய இன்று இருக்கிறது. மிகவும் வேதனை பட வேண்டிய நேரம்.
இந்தியா பற்று விக்கிபீடியா  வில் படித்தால்

" Since the introduction of market-based economic reforms in 1991, India has become one of the fastest growing major economies in the world;[20] however, the country continues to face several poverty, illiteracy, corruption and public health related challenges"

ஏழ்மையை  ஒழிக்க தான் அரசாங்கம் இருக்கிறது என்று நினைத்தால், அந்த அரசாங்கம் தான் ஊழல் செய்கிறது. இதை இப்படியேவிட்டால் எங்கு சென்று முடியும் என்று தெரியவில்லை. சட்டத்தை கடுமையாக்க வேண்டும். ஊழல் செய்தால் என்ன செய்ய முடியும், நம்ம வேற நாட்டுக்கு சென்று விடலாம் , நல்ல வாழ்கை வாழலாம் என்ற அவர்களது எண்ணத்தை ஒழிக்க வேண்டும். மிக கடுமையான தண்டனை தர வேண்டும், அவர்களுக்கு  உரிமை அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.

இப்போது தான் புதிதாக தொடங்க பட்ட மாநிலம் ஜார்கண்ட் அங்கேயே ஒரு முதல்வர் 500  கோடி அடித்தார் என்றால்  , தமிழ்நாடு பல வருடமாக இருக்கிறது , இங்கு பல பேர் , பல முறை முதல்வராக இருந்து உள்ளனர் என்றால் யோசித்து பாருங்கள்.

போன வாரம்அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியா வந்தார். அவர் அவரது மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து நடனம் ஆடினர், பார்க்கவே ஆனந்தமாக இருந்தது. நம்ம நாட்ல பிரதமரோ அல்லது எதாவது ஒரு முதல்வர்  நடனம் ஆடும வயதில் இருகிறாரா ? இன்னுமும் தள்ளு வண்டியில் வந்து நாட்டை காப்பாற்ற தான் வேண்டுமா ?
 







அமெரிக்க பிரதமர் ( அமெரிக்க ல பிரதமர் இல்லை என்று சொல்லாதிங்க ) , இங்கிலாந்து பிரதமர், மற்றும் இந்தியா பிரதமர் கடவுளிடம் சென்று எங்கள் நாடு எப்போது முன்னேறும் என்று கேட்டார்கள் .. இந்த நகைச்சுவையை அனைவரும் படித்து இருப்போம் அல்லது கேட்டு சிரித்து இருப்போம். சிரிக்க மட்டும் இல்லை சிந்திக்கவும் செய்ய வேண்டும், அதை கேட்கையில் எண் மணம் வேதனைபடுகிறது.

இனியாவது இருந்துங்கள் மக்களே.

Friday, November 5, 2010

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!

உலகில் அனைத்து நாடுகளில் இருக்கும் நமது தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தீபாவளி என்றாலே எண்ணெய் தேய்த்து குளித்தல்,புத்தாடைகள் பட்டாசு, நல்ல பலகாரம் . உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுடன் சிரித்து மகிழ்ந்து கொண்டாடுவது தீபாவளி.

தீபாவளி முந்திய நாள் இரவு கடை வீதி செல்தல் .( எதோ Benz கார் 10 ரூபாய்க்கு வாங்குவதாக நினைப்பது )
 பட்டாசு வெடித்தல், அதில் பக்கத்துக்கு வீடுகளோடு போட்டு போடுதல், யார் வீட்டில் அதிக குப்பை இருக்கிறது என்று பார்த்தல்.
 சாலமன் பாப்பையா பட்டி மன்றம் , சன் டிவி கலைஞர் டிவி சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்தல், புதிய படத்திற்கு செல்தல், கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசித்ததல்....  இந்த வருடம் விஜய் படம் வரவில்லை அதனால் தீபாவளியை புறக்கணிக்குறோம்   என்று போஸ்டர் ஓட்டுவதையே தொழிலாக கொண்டு சிலர் செயல் படுவார்கள் .

Thursday, October 28, 2010

எந்திரன் - வியாபார விபரம்

எந்திரன் வெளிவந்து முதல் 3 வாரங்களில் இந்தியாவின் அனைத்து வசூல் சாதனைகளை உடைத்து விட்டது என்பது பழைய செய்தி. எந்திரன் திரைப்படம் ஏன் எவ்ளோ மற்றும் எப்படி இவ்வளவு லாபம் வரும்அதை பற்றி பார்போம். முதல் மூன்று வாரங்களில் வசூல் மட்டும் 225 கோடி என்று சொல்லுகிறார்கள். படத்தின் மொத்தம் செலவு 150 கோடி என்றும் சொல்லி விட்டார்கள். எங்கே இப்பவே லாபம் பாத்தாச்சு. ஆனால் ரஜினி சொல்லுற மாதிரி "இனி தான் ஆரம்பம் " என்று கூட சொல்லலாம்.

சன் டிவி எப்படி ஓடுகிறது ? மெகா தொடர்கள், உலக தொலைகாட்சிகளில் முதல் முறையாக என்று சொல்லி போடும் திரைப்படங்களால் தான். எப்பவுமே சன் டிவி நல்லா படங்களை 10 கோடி முதல் 15 கோடி செலவு செய்து தயாரிப்பாளரிடம் வாங்கி கொள்ளும். அப்புறம் தீபாவளி நன்னாளில் இந்த படத்தை போட்டு அதில் வரும் விளம்பரத்தின்  மூலம் காசு பார்க்கும். நல்லா திரைப்படம் என்றால் முதல் முறையே அதிக விளம்பரம் வரும். அப்படியே அதில் நல்லா லாபம் , இது போக மறுமுறை ஒளிபரப்பும் போதும் விளம்பரம் வரும். இப்படி சன் டிவி ஒரு படத்தை வைத்து திரை கொண்டாட்டம் ,காமெடி டைம், புது பாடல்கள் , டாப் 10 பாடல்கள், டாப் 10  படங்கள் என்று பல ப்ரோக்ராம் தயார் செய்ய படுகிறது.

 இப்படி எப்பவுமே இன்னோருதனை (சினிமா காரனை) நம்பி தான் சன் டிவி ஓடுது . அதனால் ஏன் நம்மாலே படம் எடுக்க கூடாது என்று எடுக்க ஆரம்பித்த சன் டிவி. இதனால் அவர்கள் நடத்தும் 43 எப் எம் ரேடியோ, 2  தினசரி , 2 வார இதழ்கள் என்று எல்லாத்துக்கும் தீனி வழங்குகிறது. இது ஒரு வகையில் நல்ல மார்க்கெட்டிங் தந்திரமும் கூட .
எந்திரன்  பாடல் வெளியீடு -8 மணி நேரம்
எந்திரன் முன்னோட்டம் ( Trailer ) வெளியீட்டு விழா - 6 மணி நேரம்
வீடியோ பாடல் வெளியீடு ( இது யாரு கண்டு பிடிச்சாங்கன்னு தெரியல ) - 4 மணி நேரம்
எந்திரன் படம் எடுத்த விதம் ( Making of Endhiran சிவாஜி படத்துக்கு 5 நாள்.. தினமும் ஒரு மணி நேரம் போட்டாங்க .. இதுக்கு அத விட நிறைய நேரம் இருக்கும்) - 10 மணி நேரம்
100 நாள் விழா- 4 மணி நேரம்
500 நாள் விழா -  எப்படியும் ஒட்டிடுவங்க அதுக்கு ஒரு விழா - 8 மணி நேரம் 
உலகமெங்கும் எந்திரன் - 8 மணி நேரம்
இது எல்லாம் போக எந்திரன் படத்தை 2014 தீபாவளிக்கு போடுரப்ப இருக்கு பாருங்க விளம்பரம் .. 4 மணி நேரம்
இப்படி மொத்தமாக இவர்கள் 52 மணி நேரத்துக்கான சன் டிவி பிராய்ம் டைம் ( Prime Time )  அதிக TRP உள்ள ப்ரோக்ராம்களை ரெடி செய்து விட்டனர்.
ஒரு படத்தை விளம்பரத்தோட 3 மணி நேரம் சன் டிவி ஒளிபரப்பும். ( சில காட்சிகளை கத்தரித்து ) அப்படி பார்த்த எந்திரன் மூலம் திரை 17 படத்துக்கு இணையான வசூலை செய்து உள்ளனர் ( ஒரே ஒரு முதலீட்டில்) 17 * 3 = 51 மணி நேரம்.
ஒரு மணி நேரத்துக்கு சன் டிவியில் எவ்ளோ விளம்பரம் வரும் என்று யாராவது கணக்கிட்டு உள்ளார்களா ?
15 நிமிடத்துக்கு ஒரு 5 நிமிடம் என்று வைத்து கொண்டால் ஒரு மணி நேரத்துக்கு 15 நிமிடம் வரை விளம்பரம் போடா முடியும்.
15 * 20 லட்சம் ( ஒரு 30 வினாடி ஓடும விளம்பரம் 10 லட்சம் என்று கணக்கு .. இது கம்மி தான் .. ஒரு கணக்கு க்கு தான் ) = 300 லட்சம் = 3 கோடி .
52 மணி நேரம் *  3 கோடி  = 150 கோடி  ( வெறும் சன் டிவி மட்டும்)
திரை படம் 50 நாள் முடிவில் எப்படியும் 300 கோடி வசூலை தொட்டு விடும்.
டிவி வருமானம் - 150 கோடி ( சன் மட்டும் )
உசே , தேஜா , எப் எம் , பேப்பர் , நாளிதழ் இதர வருமானம் - 40 கோடி
ஆடியோ தகடு விற்பனை - 10 கோடி

அப்படி இப்படின்னு ஒரு 150 கோடி ரூபாய் முதலீட்டில் 500  கோடி வரை வியாபாரம் செய்து உள்ளனர்.  இதுக்கு நம்ம அண்ணே கேபிள் சங்கர் தான் பதில் சொல்லணும் ..இது சத்தியமா இல்லை இதை விட கூடவே வருமா ? இது வேற யாராலும் சத்தியம் இல்லை.  ஏவிஎம் கூட படம் எடுத்த இந்த அளவுக்கு அதை காசாக்கி இருக்க முடியாது.  இது போதாததுக்கு எந்திரன் படத்தில் ரஜினி உபயோகித்த உடைகளை ஏலம் விட போவதாக  கூட செய்திகள் வருது.
புதுமையாக எதாவது செய்யணும் என்றால் ... ஜுரச்சிக் பார்க் படத்துக்கு போட்ட செட் இன்னும் பத்திரமாக வைத்து அதுக்கு ஒரு நுழைவு கட்டணம் போட்டு கண்காட்சிக்கு வைத்து உள்ளனர். நம்ம ஊர்ல கூட இந்த மாதிரி செய்யலாம் ஆனால்இடம் தான் இல்லை.வெளிநாடுகளில் இந்த வசதி உண்டு.
எந்திரன் கதை என்னோடதுஎன்று கடந்த நாலு நாட்களாக செய்து வந்த வண்ணம் உள்ளது. சன் தரப்பில் அல்லது ஷங்கர் தரப்பில் இருந்து எந்த பதிலையும் காணூம்... :)

கடைசில  காலியானது நம்ம பாக்கெட் தான் ....

Wednesday, October 20, 2010

விளம்பர இடைவேளிக்கு பிறகு தொடரும் ..

நேற்று நீண்ட நாட்களுக்கு பிறகு தொலைகாட்சி பார்க்க நேர்ந்தது. அரை மணி நேரம் கூட பார்க்கவில்லை அதற்குள் ஒரு 30 விளம்பரம்.  இது தீபாவளி நேரம் வேற .. ஒரே விளம்பரம் தான்

 அந்த எல்லா விளம்பரத்திலும் ஒரு சினிமா நட்சத்திரம். இதோ அந்த லிஸ்ட்


ஆச்சி மசாலா - தேவயாணி
ஆலுக்காஸ் - மாதவன் , விஜய்,சரத்குமார் ( தனி தனியே தான்.. இன்னும் சேர்ந்து வர மாதிரி எடுத்த ஒரு நிறுவனம் சரவணா மட்டுமே )
வீராஸ் - வ.பேட்டை - பாக்யராஜ்
ஸ்ரீ குமரன் தங்க மாளிகை  - ராதிகா
அக்சர் பெயிண்ட் - சந்தானம்
அல்ட்ர க்ரிண்டர்  - தேவயாணி
சென்னை சில்க்ஸ் - அனுஷ்கா
சரவணா ஸ்டோர்ஸ் - சூரியா
ஜெயச்சந்திரன் - சாயா சிங் , பூர்ணா ஸ்ரீ
எதோ ஒரு நகை கடை விளமபரம் - பத்மா பிரியா
போதிஸ் - நயன்தாரா
சாரதி வேஷ்டி - பிரசன்னா
கல்யாண சாரீஸ் - ஸ்ரேயா
தங்க மயில் - நதியா
ஸ்ரீ தேவி டேக்ஸ்டிலே - பாவனா
யுனிவர்சல் மொபைல் - மாதவன் 

இப்படி ஒரே சினிமாகரங்களா வரங்க. ஒரு விளம்பரம் எதுக்கு அவங்க பொருள் நல்லா இருக்கு நு விளம்பரபடுத்த. சினிமா கரங்க நிறைய வருவதினால் பொருள் மீது போக வேண்டிய கவனம் அவர்கள் மீது போகிறது.  Branding , Star value  எல்லாம் ஒகே . ஆனால் இங்கே அதன் முக்கிய காரணத்தை தவற விட்டார்களோ  என்ற ஒரு எண்ணம்.
இன்றைய உலகத்தில் விளம்பரம் முக்கியம் தான் அதே சமயம் ஒரு தரம் குறைந்த பொருள் பெரிய நடிகர் மூலம் விளம்பரம் செய்து விற்க முடியாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரே நடிகர் பல விளம்பரத்தில் வந்தால் ரசிகர்கள் குழப்பம் ஏற்படும். ஒரு காலத்தில் விளம்பரத்திற்காக நான் டிவி பார்ப்பது உண்டு ஆனால் இன்று அது அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு என்ற போக்கில் போய் கொண்டு இருக்கிறது . விளம்பரம் செய்து விற்பனை கூட்டினார்களோ இல்லையோ ஆனால் போட்டி காரணமாக அதை செய்ய வேண்டி உள்ளது . கடைசியில் லாபம் யாருக்கு டிவி உரிமையாளர்க்கு  தான். யாருக்கு என்று எல்லாருக்கும் தெரியும்.

நல்லா விளம்பரம் என்பது எப்பவுமே போட்டலும்  பார்க்கலாம் அந்த மாதிரி எடுக்கணும். இதோ ஒரு பொங்கல் ஆசியன் பெயிண்ட் விளம்பரம்.




இந்த விஜய் விளம்பரம் சமீபத்தில் பார்த்தேன் ...பார்த்து ரொம்ப  பீலிங் .. எப்படி எல்லாம் விளம்பரம் எடுக்குக்ரங்கா நு தான் .. இது என்ன படமா ??



ராஜீவ் மேனன் இருந்த நேரம் மிக அருமையாக இருக்கும்.தற்போது அதன் தரம் குறைந்து விட்டது என்பது தான் எனது வாதம்.
ஒரு நடிகரை வைத்து விளம்பரம் எடுப்பது என்பது படம் எடுப்பதற்கு சமம. அவர் நல்லா மவுசு இருந்தால் நன்றாக வரும் , அவர் சரி இல்லை என்றால் இவர்கள் விளம்பரம் , வர்த்தகம் எல்லாம் பாதிக்கும். சக்தி ஊறுகாய் மற்றும் ராஜ்மஹால் விளம்பரம் இங்கே சொல்ல வேண்டும் அவர்கள் தமன்னாவை வைத்து முன்பே விளம்பரம் எடுத்தார்கள்அப்போது அவர் சினிமாவில் இல்லை , இப்போது மிக பெரிய நடிகை.


விளம்பரம் எனக்கு ரொம்ப பிடிக்கும் , தற்போது இந்த விளம்பரம் பார்க்க நேரிட்டது . மிக அருமை , அற்புதம்.



இதை இரண்டு பாகமாக எடுத்து உள்ளனர். கடைசியில் சேர்த்தார்களா இல்லையா என்பது எடுத்த பாகம் ? அதை யாராவது பார்த்தல் எனக்கு சொல்லுங்களேன்.

Friday, October 15, 2010

11 பேர் கொண்ட குழு !!!

மதுரையில் அக்டோபர் 18 அன்று அ தி மு க நடத்தும் ஆர்பாட்டம் மிகவும் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டி உள்ளது. முதலில் சென்ற மதம் நடப்பதாக இருந்தது. பின்னர் கொலை மிரட்டல் வந்ததை ஒட்டி தள்ளி வைக்கபட்டது. இப்போது தேதி நெருங்க நெருங்க போஸ்டர் கலாச்சாரத்துக்கு பெயர் போன மதுரை நகரில் மீண்டும் போஸ்டர் யுத்தம் துவங்கி உள்ளது.
அண்ணன் அழகிரி வாழ்க என்றும் ஜெயலலிதா வை எதிர்த்து தி மு க வினர் போஸ்டர் ஓட்டுகின்றனர். அதற்கு நேர் மாறாக அ தி மு க வினர் அழகிரி மற்றும் தி மு க அரசை எதிரித்து போஸ்டர் ஓட்டுகின்றனர். இருவருக்கும்  உள்ள யுத்தம் நன்கு தெரிந்ததே இருபினும் போஸ்டர் மூலம் அதை வெளி காட்டுகின்றனர்.
இதோ சில போஸ்டர் உங்கள் பார்வைக்கு.

 இவங்க creativity ஒரு அளவே இல்லாமல் போயவிட்டது. ஒபாமா வை கூட விட்டு வைக்கவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள். இயக்குனர் ஷங்கர் கூட இவங்க கிட்ட வந்து ஐடியா கேக்கலாம். அந்த அளவுக்கு 11 பேர் கொண்ட குழு செயல் படுது.
 



















அதிமுக போட்டோ முதல்ல போட்டேன் என்பதற்காக நான் அதிமுக இல்லை. அதே சமயம் நான் திமுக வும் இல்லை. ( கம்யூனிஸ்ட் ம் இல்லை )
நடோடிகளில் வருவது போன்ற 11 பேர் கொண்ட குழு செயல் படுகிறது என்று நினைக்குறேன்.

Monday, October 11, 2010

விக்கிபீடியாவுக்கு உதவுங்கள்

நம்மில் அனைவரும் விக்கிபீடியா உபயோகித்து இருக்கிறோம். 
ஒரு பிரபலத்தின்  விபரமோ அல்லது நாட்டு நடப்போ எதுவாக இருந்தாலும் விக்கிபீடியா வில் அதை படித்து இருப்போம்
நமக்கு பலவழிகளில் உதவிய விக்கிபீடியா தற்போது உதவி கேட்கிறது. நம்மால் முடிந்த உதவி செய்வோம். ஒரு ரூபாயாக இருந்தாலும் அது உதவி தான்.

விக்கிபீடியா இல்லாத ஒரு இணையத்தை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. 


எந்திரன் மற்றும் ஷங்கர் திரைபடங்கள்

நேற்று தான் எந்திரன் பார்க்க முடிந்தது. எனக்கு படம் சுமார் என்று தான் தோன்றியது. ஷங்கரின் மிக பெரிய ரசிகன் நான். இந்த படத்தில் அவர் உழைப்பு தெரிகிறது  ஆனால் இந்தியன், முதல்வன் , அந்நியன், சிவாஜி , காதலன்  படங்களை மக்களுக்கு காட்டிய ஷங்கர் தானா என்ற ஒரு எண்ணம் தோன்றுகிறது .

ஷங்கர்  திரைப்படங்களை பார்த்தால்
Gentleman - இது தான் அவரது முதல் படம் அதனால் இதில் அவர் விளையாட வில்லை. ஒரு நல்ல படம் , நன்கு ஓடியது . குஞ்சுமோன் தான் தயாரிப்பாளர்.

காதலன் - இது முழுக்க முழுக்க ஒரு காதல் படம் - நடனத்துக்கு முக்கியதுவம்  கொடுத்த படம். இதில் முக்கால முக்கபுள்ள என்ற பாடல் இன்று கேட்டால் கூட பார்க்க துண்டும் அளவுக்கு நல்ல கிராபிக்ஸ் .

இந்தியன் - இங்கு தான் தனது முத்திரையை பதித்தார். மர்ம கலை என்பதை இவர் மூலமாகதான் மக்கள் அறிந்தனர். கமல், நல்ல தேசப்பற்று மிக்க கதை நல்ல பாடல்கள்,  என்று இந்த படத்தை எங்கோ தூக்கி சென்றது.

ஜீன்ஸ் - இந்த படம் பிரசாந்துக்கு வாழ்வு கொடுத்த படம் என்ற சொல்லலாம். அமெரிக்காவை கௌதம் மேனன்க்கு  முன்னால் நன்றாக காட்டினர். உலக அழகி, உலக அதிசயம் என்று இந்த படத்தை 2 வருடம் எடுத்தார் . பாடல்கள் என்று கேட்டால்,  கூட இனிக்கும் அந்த அளவுக்கு நல்ல பாடல்கள்.

முதல்வன்- இந்த படம் ஒரு சாதாரண மனிதனை கூட சிந்திக்க வைத்த படம்.
 அனைவரும் இந்த படத்தை பற்றி அறிந்ததே.


பாய்ஸ் - கொஞ்சம் சறுக்கிய படம். தொழில்நுட்ப வகையில் என்னை கவர்ந்த படம். நல்ல கேமரா , மோசன்  பிரீஸ்

அந்நியன் - திரும்ப பழைய பார்முலா லஞ்சம, ஊழல் போன்றதை சொல்லிய படம். விடாது கருப்பு டிவி தொடர் கிளைமாக்ஸ் split பெர்சொனலிட்டி என்ற ஒரு கருத்தை படத்தில் காட்டினர்.

சிவாஜி - AVM ரஜினி ரஹ்மான என்று ஒரு பெரிய கூட்டணி . வெற்றியும் பெற்றது .அதற்கு மேல் இந்த படத்தில் எதுவுமே செய்ய முடியாது என்ற வரைக்கும் எடுத்த படம்.


இப்படிபட்ட இயக்குனர் இயக்கிய படம் எந்திரன். எந்திரன் Bicentennial man, Iron man, IRobo போன்ற படங்களின் சாயல் ரொம்ப இருந்தது. படத்தில் நேரிய விஷயங்களை சொல்ல ஷங்கர் முயற்சி செய்து இருக்கிறார். ஆனால் ஏனோ எனக்கு படம் ஒரு நிறைவை தரவில்லை. ரஜினியை வைத்து இவ்ளோ கஷ்ட பட்டு எடுத்த ஒரே இயக்குனர் இவராக தான் இருக்க முடியும்.

எல்லா படங்களுக்கும் 2 வருஷம் எடுத்த ஷங்கர் இந்த படத்தையும் 2  வருடம் எடுத்தது ஒரு ஆச்சிர்யம். இந்த படம் ஷங்கர் இன்னும் கொஞ்ச நேரம் எடுத்து இருந்தால் இன்னும் அருமையாக வந்து இருக்கும் என்பது எனது வாதம்.

பாடல்கள் மிக மோசமாக உள்ளது. அதற்கு செட் அந்த அளவுக்கு இல்லை. ஷங்கர் படம் என்றாலே செட் தான் ஞாபகம் வரும். சிவாஜி சகானால இருந்து ஆரம்பித்த இந்த பிரச்சனை,  இதில் பாடல்களுக்கான செட் நன்றாக இல்லை, நேற்று வந்த சிம்பு படத்தில் கூட பாடல்களுக்கு நல்ல செட் உள்ளது.

கிளைமாக்ஸ்  காட்சியில் ரஜினி எதோ ஒன்றை ஒரு பாக்ஸ்இல்  வைத்து அதை மூடி அப்புறம் ப்ரோக்ராம் செய்வர். அந்தபாக்ஸ் எங்க வீட்ல இருக்குற டேபிள் டிஜிட்டல்  காலெண்டர் - அது வெறும் 75 ரூபா தான் பிளாட்பாரம் கடைகளில் கூட கிடைக்கிறது.  இது தான் உங்கள் படமா ஷங்கர்.



அப்புறம் காதல் அணுக்கள் பாடலுக்கு லாங் சாட்ல இவங்க நடந்து வந்த கால சுவடுகள் தெரியும். அது நேரிய டைம் ப்ராக்டிஸ் பண்ணதுல நேரிய ஆயிடுச்சு. எப்பவுமே ஷங்கர் படத்தில் இதை கூட சரி செய்து தான் படம் எடுப்பார். எதோ இதை விட்டு விட்டார்.


இதுல சிட்டி ரோபோவ - அல்லது சூப்பர் மண் என்ற ஒரு சந்தேகம் வருது.
மேலை நாடுகளில் அவர்கள் இந்த மாதிரி படம் எடுத்தாலும் அதில் அவர்கள் இசாக் அசிமோவ் விதி என்று ஒன்று உள்ளது அதை தான் முதலில் சொல்லுவார்கள்  ஆனால் இந்த படத்தில் அதை பத்தி எல்லாம் கவலையே படவில்லை ஷங்கர். மக்களுக்கு தெரியவா போகுது என்று கேட்டால். மக்களுக்கு தெரியாது தான் , நீங்க தான் அதை சொல்லணும் அதை விட்டுட்டி basic assumption  தப்பா இருப்பது தான் மிக வருத்தம்.

இந்த படத்தில் வரும் கதை கதாபத்திரங்கள் அனைத்தும் கற்பனையே நு கூட போடல, சுஜாதா மற்றும் கொச்சின் ஹனிபா க்கு இரங்கல் ,

எங்கயோ மாச்சு பீச்சு க்கு பொய் எடுத்தாங்க சேரின்னு பார்த்த . அது ஒரு லாங் சாட் ல கட்டுறாங்க அவ்ளோ தான். காதலர் தினம் ல தாஜ்மஹால்  ல கஷ்ட பட்டு புது புது ஆங்கிலே ல கதிர் எடுத்து இருப்பார். அந்த லெவல் க்கு கூட இல்லை.

ஷங்கரை சொல்லி குற்றம் இல்லை அவரிடம் இருந்த சரக்கு தீர்ந்து விட்டது . என்று தான் சொல்ல வேண்டும்.ஷங்கர்யை இந்த படம் முடித்ததற்கு பாராட்ட வேண்டும் என்றாலும் ஷங்கரிடம் எதிர்பார்த்தது இன்னும் ஒரு படி மேல. பிரமாண்டமாக எடுக்க முயற்சி செய்தது இருக்கட்டும் ஒரு புறம் , ஆனால் கதையை நல்லா பட்டை தீட்ட முயற்சி செய்ய வேண்டும் ஷங்கர்.

பின் குறிப்பு : நான் ரோபோடிக்ஸ்ல பட்டம் பெற்றவன் என்ற முறையில் சொல்லுகிறேன். இந்த படம் சுத்த அபத்தம், இங்கிலீஷ் கரனுக்கு போட்டு காட்டின காரி துப்பிடுவான்.

Wednesday, October 6, 2010

சிந்தனைக்கு சில

வாழ்வில் நமக்குத் தேவையான ஊக்கத்தைப் பெறுவதற்குச் சிரமப்படுகின்றோம். நாமாகப் பெறும் உந்துசக்தியைவிட வெளியிலிருந்து வருவது வலுவாக உள்ளது.
நாம் பெற்ற ஊக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள சில யோசனைகள் இதோ:
உந்துசக்தி உன்னிடமே உள்ளது. நீயேதான் அதைத் தட்டி எழுப்ப வேண்டும்; பிறர் உனக்குத்தருவது ஊக்கம் மட்டும்தான்.
  • உலகுக்கு நீ ஏன் வந்துள்ளாய் என்று உணர்ந்தால் உன் வாழ்விற்கு ஓர் அர்த்தம் கிடைக்கும்.
  • சரியாகத் தோற்றமளிப்பது ஒன்று; சரியாக இருப்பது மற்றொன்று. இவற்றில் பின்னதையே தேர்வு செய்.
  • நீ நம்பினாலும், நம்பாவிட்டாலும், உனக்குள்ளே தனித்தன்மை கொண்ட பெரும் ஆற்றல் உள்ளது.
  • கடும் உழைப்பு, ஒருவரது விருப்பமல்ல – அது ஒரு கட்டாயம்.
  • நேர்மை – பேரம் பேசக்கூடியதோ அல்ல. நேர்மை மட்டும் இருந்துவிட்டால், யாவும் பின்தொடர்ந்து வரும்.
  • எதை நினைக்கிறாயோ அதுவே உன் நடத்தை. எவ்வாறு நடந்துகொல்வாயோ, அதுவே உன் மரியாதை, மதிப்பு எல்லாம். அதனால் சிந்தனையைச் செம்மைப்படுத்து.
  • உலகத்தின் விரிவான அமைப்பில் நீ ஒரு சிறு புள்ளி மட்டுமே. அதனால் அடக்கமாக இரு.
  • ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய நுணுக்கத்தைக் கற்கவில்லை என்றால் வேலை செய்வதை நிறுத்து.
  • தெளிவான பங்கேர்பைவிட தெளிவான இலக்கே மிக அவசியம்.
  • தரம் என்பது ஒரு பிரிவல்ல, அது ஒரு வாழ்வு முறை.
  • கூற நினைத்தால் கூறிவிடு. ஊமைபோல் நடிக்காதே. மோசமாகத் தோற்றுப்போகும் நிலை எப்போதும் வரவே வராது.
  • இன்றைக்கு நீ யாருக்காவது ஏதாவது உதவி செய்தாயா? இல்லை என்றால் இன்று நீ வாழவே இல்லை. பல உயிரற்றப் பொருள்களுடன் நீயும் ஒன்றாக இருந்திருக்கிறாய்.
  • மகிழ்ச்சியை நீ தேடு, பணம் உன் பின்னே வரும். பணத்தைத் தேடினால் உன் பின்னால் மகிழ்ச்சி வராது!
  • உன்னைக் கோபித்தார்களா, வியாபாரத்தில் நஷ்டமா, உறவு ஏதும் முறிந்துவிட்டதா – இது உன் நல்ல நேரம் – அதற்கு நன்றி சொல். இது உனக்கு நடந்த நல்ல நிகழ்வு.
  • அடுத்த நிகழ்வைப் புதிதாகத் துவக்க ஒரு நல்ல வாய்ப்பு.
    என்ன நடக்க வேண்டும என்று நீ நினைப்பது நடந்துவிட்டால் சந்தோஷம். நடக்க வேண்டும் என எண்ணியது நடக்கவில்லை எனில் இரட்டிப்பு மகிழ்ச்சி; கொண்டாடு.
  • பிறரை நீ ஈர்ப்பதற்கு உண்மையே பேசு.
    கடவுள் உனக்கு வகுத்துள்ள திட்டத்தில் தவறு கிடையாது. பிரச்சனையைச் சந்தித்தால், அதன் தீர்வில் ஒரு பங்காக இருக்க முயற்சி செய்.
  • உன் தொலைநோக்கு, இலக்கு, செயல்பாடு ஆகியவற்றில் உறுதியாக இரு.
  • வாழ்க்கையில் கிடைக்கும் சந்தர்ப்பத்தை உரிய நேரத்தில் வாழ்நாளுக்குள்லேயே பயன்படுத்த வேண்டும். ஆரப் போடாதே.
  • நீ நீயாக இருப்பதற்காக, உன் பெற்றோர், ஆசிரியர், வழிகாட்டி அனைவருக்கும் நன்றி கூறு.
(நன்றி: Career Sutra by Avis New Indian Express)
தமிழில்: பேராசிரியர் ஹரிஹரன்

நன்றி ராமகிருஷ்ண விஜயம்.
http://ramakrishnavijayam.com/?p=325

Monday, September 27, 2010

நான் படிக்கும் ப்ளாக்கள்

http://idlyvadai.blogspot.com/ - இட்லி வடை
http://www.thoughtsintamil.blogspot.com/ - பத்ரி சேஷாத்ரி
http://cablesankar.blogspot.com/ - கேபிள் சங்கர்
http://www.jackiesekar.blogspot.com/ -பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்
http://www.luckylookonline.com/ -யுவகிருஷ்ணா
http://www.writerpara.com/paper/ - பா ரா 
http://www.aveenga.blogspot.com/  - அவிங்க 
http://photography-in-tamil.blogspot.com/ - தமிழில் புகைப்பட கலை
இது தவிர 
http://www.dinamalar.com/
http://dinakaran.com/

 

Saturday, September 25, 2010

எந்திரன் - Bicentennial Man - தழுவலா ???

Bicentennial Man ( இரு நூறாண்டுகளின் மனிதன் ) என்ற படம் ஒரு ரோபாட் பற்றிய கதை.

இதில் ஒருவர் ரோபாட் ஒன்றை வாங்குகிறார். அதை தமது வீட்டில் ஒரு குழந்தையை போல வளர்கிறார். அதற்கு எல்லா விஷயங்களை கற்று தருகிறார்.
அந்த ரோபாட் அவரது குழந்தைகளுடன் விளையாடுகிறது. முதலில் அனைவரும் பயந்தாலும் பின்னர் அவர்களது குடும்பத்தில் ஒரு மனிதன் போல ஆகின்றது. மூன்று தலைமுறைக்கு அந்த ரோபாட் அவரது வீட்டில் இருக்கிறது. இதை அந்த படத்தில் அற்புதமாக சொல்லி இருப்பர் இயக்குனர்


மனிதனின் உணர்ச்சிகள் ரோபாட்க்கு கிடையாது. அதால் சிரிக்க முடியாது அழ முடியாது. என்ன தான் மனிதனை போல உடை , பவனை, என்று எல்லாமே இருந்தாலும் மனிதன் போல ஆக முடியாது என்று இதில் நன்கு காட்டி இருப்பார் இயக்குனர் கிரிஸ் கொலம்பஸ் ( Chriss Columbus ).  ராபின் வில்லியம்ஸ் (Robin Williams) தான் ரோபாட்.


Bicentennial Man Trailer
Uploaded by Augenblicke. - Watch feature films and entire TV shows.


இது தான் நம்ம சூப்பர் ஸ்டார் எந்திரனின் கதை என்று நான் நம்புகிறேன் . நம்ம ஷங்கர் ஜெயம் ராஜா அல்ல . அப்படியே டிரஸ் கலர் முதற்கொண்டு பின்பற்ற. ஷங்கர்ககு என்று ஒரு தனி திறமை உள்ளது. மக்களை பரவச படுத்தும் இயக்குனர்களில் ஒருவர்.
மிக பிரமாண்டமான 2 செட், நல்ல கண்ணுக்கு குளிர்ச்சியான இடங்களை காட்டுவர். எந்த ஒரு விஷயத்தையும் பாமரன்க்கு கூட புரியும் படியாக சொல்லுவது ஷங்கரின் இயல்பு.


ரோபாட்க்கு மூன்று முக்கிய விதிகள் உள்ளன. இசாக் அசிமோவ் என்றவர் தான் ரோபாட் என்ற வார்த்தையை முதலில் உருவாக்கினர். அவர் எழுதிய புத்தகத்தில் அந்த வார்த்தையை பயன் படுத்தினர். பார்போம் இந்த விதிகளை பற்றி சொல்லுகிறார என்று

1. ரோபாட் எந்த ஒரு மனிதனையோ அல்லது உயிர் வாழும் ஜீவன்க்கு  தீங்கு விளைவிக்க  கூடாது.
2. ரோபாட் மனிதன் சொல்லுவதை தான் கேட்க வேண்டும் அது முதல் விதியை மீற கூடாது.
3. ரோபாட் தன்னை தானே பாதுகாத்து கொள்ள வேண்டும். மேலே சொன்ன இரண்டு விதிகளையும் மீற கூடாது .

இது தான் ரோபாட் அடிப்படை.


Bicentennial Man - youtube la 16 பாகமாக உள்ளது . முடிந்தால் என்திரன்க்கு முன்னால் இதை பாருங்கள்

http://www.youtube.com/user/friendjj3000#p/u/17/GbFwDzbRyn4

இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்து விடும் அது வரை பொறுமையாக இருப்போம்.

Tuesday, September 21, 2010

MIT இல் படிக்கலாம் வாங்க !!!

உலகத்திலேயே முதன்மையான கல்லூரி என்றால் அது MIT - மச்சசுசெட்ட்ஸ் இன்ஸ்ட்டியூட் ஒப் டெக்னாலஜி ( Massachusetts Institute of Technology - Madras Institute of Technology இல்லை).

அவர்களின் திறந்த நிலை பல்கலை கழகம் .. நமது ஊரில் ஒரு காலத்தில் இந்திரா காந்தி பல்கலை கழகம் தூர்தர்ஷன் மூலமாக இந்த கல்வியை பரப்பியது நினைவு இருக்கலாம்.
http://ocw.mit.edu/index.htm

எல்லா துறைகளிலும் இவர்களது பாடம் உள்ளது.
MIT சென்று படிக்க எல்லாருக்கும் தான் ஆர்வம இருக்கும். ஆனால் எல்லாருக்கும் அது முடியுமா என்றால் கடினம் தான். இதனால் அனைவருக்கும் கல்வி சென்று அடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இதை செய்து இருக்கிறார்கள்.

சில பாட திட்டங்கள் Youtube படம் பிடித்து போட்டு இருகின்றனர்.


கல்வி எல்லாருக்கும் எல்லா வயதினருக்கும் அவசியம்.
புத்தங்களை படிக்கும் ஆர்வத்தை வளர்க்க வேண்டும்.

இதே போன்று ஸ்டான்போர்ட் ( Stanford) மற்றும் நம் ஊர் IIT பாடங்களை கூட இலவசமாக படிக்கலாம்.

Stanford - http://see.stanford.edu/see/courses.aspx
IIT - http://www.youtube.com/iit#g/p

Saturday, September 18, 2010

Sunday, September 12, 2010

மதுரை புதிய விமான முனையம் : சிதம்பரம் திறந்து வைத்தார்


மதுரை : ஒரே நேரத்தில் ஏழு விமானங்களை நிறுத்தவும், 500 பயணிகளை கையாளவும் ஏற்ற நவீன வசதிகளுடன், மதுரை விமான நிலைய புதிய ஒருங்கிணைந்த முனையம் இன்று திறக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த முனையம் 17 ஆயிரத்து 500 சதுர மீட்டரில், 128 கோடி ரூபாய் செலவில், உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று ஏரோ பிரிட்ஜ் இணைப்புகள் ("ஏரோ பிரிட்ஜ் பிங்கர்ஸ்') கட்டப்பட்டு உள்ளன. இதன்மூலம் விமான நிலைய கட்டடத்தில் இருந்து, நேரடியாக விமானத்திற்கு செல்ல முடியும். ஏற்கனவே, மதுரை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் ஐந்து விமானங்களை நிறுத்த முடியும். புதிய முனையம் திறக்கப்பட்டதும் ஏழு விமானங்களை நிறுத்தலாம்.

பசுமை கட்டடம்: சுற்றுப்புறச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, மின்சாரத்தை சேமிக்கும் பசுமை கட்டடமாக ("கிரீன் பில்டிங்') புதிய முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆறு "எஸ்கலேட்டர்' (நகரும் படிக்கட்டு), ஆறு "லிப்டு'கள் உள்ளன. வெளிநாட்டு பயணங்களுக்கான இமிகிரேஷன், கஸ்டம்ஸ் பணிகளுக்கு தனியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை சோதனை செய்வதற்கான (செக் இன் ஏரியா) ஒரே இடத்தில் அமைக்கப்படுகிறது. புறப்படும் 250 பயணிகள், வந்துசேரும் 250 பயணிகள் என 500 பேரை ஒரே நேரத்தில் கையாளுவதற்கான வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழா இன்று மாலை 3.30 மணிக்கு நடக்கிறது. மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் தலைமை வகிக்கிறார். மத்திய அமைச்சர் அழகிரி முன்னிலையில், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் திறந்து வைக்கிறார். அக்டோபரில் செயல்படும்: புதிய முனையக் கட்டடத்தை விமான நிலையங்கள் ஆணையக் குழும திட்ட உறுப்பினர் ராஹேஜா நேற்று பார்வையிட்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதிய முனையம் அக்டோபர் இறுதியில் செயல்பட துவங்கும். இக்கட்டடத்தில் மழை நீர் சேகரிக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வீணாகும் கழிவு நீரை தனியாக பிரித்து பிளான்ட்டுகள் மூலம் சுத்திகரிப்பு செய்யப்படும். தேவைக்கு ஏற்ப ஊழியர்கள் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் பணியமர்த்தப்படுவர், என்றார். தென்மண்டல நிர்வாக இயக்குனர் தேவராஜ், பொது மேலாளர் (திட்டம்) சுதாகர், மதுரை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி சங்கையா பாண்டியன் உடனிருந்தனர்.

மண்ணெண்ணெய் விளக்கு ஒளியில் தரை இறங்கிய விமானம்  : மண்ணெண்ணெய் விளக்கு ஒளியில் விமானம் தரை இறங்கிய மதுரையில், தற்போது விமான நிலையமே மின் விளக்குகளால் ஒளிர்கிறது. மதுரை விமான நிலையத்தில் 1960களில், சில நாட்கள் விமானம் இரவில் வந்து செல்லும். ரன்வே முழுவதும் மின்விளக்கு வசதிகள் அப்போது இல்லை. அந்த காலத்தில் பயன்படுத்தப்படும் "லாந்தர்' விளக்குகள் போன்றவையே, ரன்வே பகுதியிலும் பயன்படுத்தப்பட்டன. விமான நிலைய ஊழியர், 10லிட்டர் மண்ணெண்ணெய் கொள்ளளவு உள்ள விளக்குகளை தரையை சுத்தம் செய்து ரன்வே அருகே வைப்பார். மண்ணெண்ணெய் நிரப்பப்பட்டு, தடிமனான திரி போட்டு விளக்குகளை பற்ற வைத்த பின், விமானம் தரை இறங்கும். தரை இறங்கும்போதே பாதி விளக்குகள் அணைந்துவிடும், விமானம் செல்வதற்கு முன் மீண்டும் விளக்குகள் பற்ற வைக்கப்படும்.

ஓய்வு பெற்ற விமான நிலைய ஊழியர் பங்காரு கூறியதாவது:  அப்போது பாதுகாப்பு சோதனை என்பது கிடையாது. மதுரை குற்றப்பிரிவு அலுவலகத்திலிருந்து எஸ்.ஐ., மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபடுவர். அப்போதிருந்த குறைந்த வசதிகளை வைத்து விமான போக்குவரத்தை நடத்தியது பெரிய விஷயம்.  இவ்வாறு பங்காரு கூறினார்.  1965லிருந்து 1970 வரை சித்திரைத் திருவிழாவை பார்க்க பக்தர்களுக்காக, குட்டி விமானங்கள் மதுரையில் இயக்கப்பட்டன. இதற்கான  25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

மதுரை மண்ணை தொட்ட விமானங்கள் : ராணுவ விமானதளமாக இருந்த மதுரை விமானநிலையம், 1960க்கு பின் சிவில் விமான போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டது.
*மதுரைக்கு 1965ல் "டகோடா(டி.சி.,3)' ரக விமானம் சென்னையிலிருந்து வந்து சென்றது. அதில் 26 பேர் செல்லலாம். பின் 40 பேர் பயணம் செய்யும் "போக்கர் பிரண்ட்ஷிப்' ரக விமானம் மதுரை வந்தது.
*1970 களில் மதுரை வந்த "ஆவ்ரோ' ரக விமானத்தில் 48 பேர் பயணம் செய்தனர். சென்னை-மதுரை- திருவனந்தபுரம் மற்றும் சென்னை-மதுரை-பெங்களூரு என இரு விமான சர்வீஸ்  நடந்தது.
*1980க்கு பின் "போயிங் 737' ரக விமானம் மதுரை வந்தது. அதில் 147 பேர் பயணம் செய்ய வசதி இருந்தும், ரன்வே பலவீனமாக இருந்ததால், குறைந்த அளவு பயணிகளே அனுமதிக்கப்பட்டனர். அதன்பின், என்.இ.பி.சி., தனியார் நிறுவனம் "ஏ.டி.ஆர்.,' ரக விமானத்தை சென்னை- மதுரை போக்குவரத்திற்கு பயன்படுத்தியது.
*ஈஸ்ட் வெஸ்ட் ஏர்லைன்ஸ் தனியார் நிறுவனம் "போயிங்' ரக விமானத்தில் மும்பை-மதுரை போக்குவரத்தை துவக்கியது. சில ஆண்டுகளுக்கு பின் இரு நிறுவனமும் போக்குவரத்தை ரத்து செய்தது.
*தற்போது ஜெட் ஏர்வேஸ், ஏர் டெக்கான் நிறுவனத்துடன் இணைந்த கிங் பிஷர் நிறுவனங்கள் "ஏ.டி.ஆர்.,' ரக விமானங்களை பயன்படுத்துகிறது. பாரமவுன்ட் ஏர்வேஸ் "எம்பரர்' ரக விமானத்தை பயன்படுத்துகிறது.
*இந்தியன் விமான நிறுவனம் "ஏர்பஸ் 320' ரக விமானத்தை பயன்படுத்துகிறது. இதில் குறைந்தது 170 பயணிகள் செல்லலாம். தற்போது மதுரை வரும் சிறிய ரக விமானங்களுக்கு இடையே "ஏர்பஸ் 320 ' ரக விமானம் ஜாம்பவானாக உள்ளது.

விமான நிலையம்...இதுவரை : இரண்டாம் உலகப் போரின் போது ராணுவ விமானதளமாக மதுரை விமானநிலையம் இருந்தது. பின், மதுரையில் இருந்த பிரிட்டன் அதிகாரிகளின் போக்குவரத்திற்கும், அவர்களுக்கு பத்திரிகைகள் எடுத்துவரவும் விமான போக்குவரத்து துவங்கியது. சுதந்திரத்திற்கு பின் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் அவ்வப்போது மதுரை வந்து செல்லும். பின்னர் சில ஆண்டுகளில், தினமும் மும்பையிலிருந்து சென்னை வழியாக மதுரை, மீண்டும் அதே மார்க்கமாக மும்பைக்கு விமானம் சென்றது. அப்போது எல்லாம் மதியம் வரவேண்டிய விமானம் நள்ளிரவு 12 மணிக்கு கூட வரும். இடையில் தனியார் நிறுவனங்கள் சிறியரக விமானங்களை இயக்கி, தொடர முடியாமல் விட்டு விட்டன.

தனியாருக்கு அனுமதி அளித்ததும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஏ.டி.ஆர்., ரக விமானத்துடன் மதுரையில் போக்குவரத்தை துவக்கியது. சென்னை-மதுரை மீண்டும் சென்னை என சர்வீஸ் இருந்தது. பின், ஏர் டெக்கான் நிறுவனம் சென்னை-மதுரை-சென்னை, சென்னையிலிருந்து மதுரை வழியாக தூத்துக்குடி என ஏ.டி.ஆர்., ரக விமான போக்குவரத்தை துவக்கின. சில ஆண்டுகளுக்கு முன் பாரமவுன்ட் ஏர்வேஸ் நிறுவனம் சர்வீசை துவக்கியது.  விமான நிறுவனங்களுக்கு இடையே எழுந்த போட்டியால், சில ஆண்டுகளுக்கு முன் தினமும் 11 விமானங்கள் மதுரை வந்தன. தற்போது ஒன்பதாக குறைந்து விட்டது.

மதுரை எம்.பி.,யாக ராம்பாபு இருந்தபோது, சர்வதேச விமானநிலையமாக மாற்றுவேன் என்றார். அதற்கடுத்து சுப்பிரமணியசாமி எம்.பி.,யானபோது, பழைய கட்டடத்தை புதுப்பிக்க 35கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்தன. இது தான் மதுரையில் பன்னாட்டு விமானநிலையம் வர, நடந்த முதல்பணி எனலாம். பின்னர் மோகன் எம்.பி., பார்லி.,யில் இது தொடர்பாக பேசினார். மத்திய அமைச்சராக மு.க.அழகிரி பொறுப்பேற்றதும், புதிய முனைய பணிகள் தீவிரமானது. விமானநிலைய ரன்வேயின் நீளம் ஆறாயிரம் அடி, 45 மீட்டர் அகலம் என 2005 வரை இருந்தது. சிறிய ரக விமான போக்குவரத்திற்கு மட்டும் இது வசதியாக இருந்தது. பின்னர் ரன்வேயை விரிவாக்கும் பணி 2007 ல் முடிந்தது. அதன் பின், விமானங்களை நிறுத்தும் "ஏப்ரன்' பகுதிக்கான வேலைகள் துவங்கி, 2008 மார்ச்சில் முடிந்தன. ஐந்து விமானங்களை நிறுத்தும் வசதி கிடைத்தது. கருவிகள் மூலம் விமானங்களை தரை இறக்கும் ஐ.எல்.எஸ்., (இன்ஸ்ட்ரூமென்ட் லேண்டிங் சிஸ்டம்) வசதி ஐüலை 2008ல் செயல்பாட்டிற்கு வந்தது. இதன் மூலம் பனி, மழை காலத்தில் விமானங்கள் ரன்வேயில் இறங்கி, ஏறுவது எளிதாக இருக்கும்.

பன்னாட்டு விமானநிலையம்:விமானநிலையம் அருகே ஒருங்கிணைந்த பன்னாட்டு விமானநிலைய கட்டடத்திற்கான அடிக்கல்நாட்டுவிழா 2008 ஏப்.,26ல் நடந்தது. விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல்படேல் தலைமை வகித்தார். முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். பணிகள் துரிதமாக நடந்து இன்று திறப்புவிழா காண்கிறது.

மதுரை விமான நிலையத்திற்கு மேலும் என்ன தேவை : நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு, இன்று (செப்.,12) மதுரையில் புதிய ஒருங்கிணைந்த விமான முனையம் திறக்கப்பட உள்ளது. மொத்தம் 17,500 சதுர மீட்டர் பரப்பளவில், பரந்து விரிந்துள்ளது புதிய முனையம். 9,500 அடி நீளத்திற்கு விமான ஓடுபாதை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உலக சர்வதேச விமான போக்குவரத்து வரைபடத்தில், மதுரையின் பெயரும் இடம் பெற இருக்கும் நிலையில், இந்த முனையத்திற்கு இன்னும் என்னென்ன தேவை என சிலரிடம் கேட்டபோது...தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன்: மதுரைக்கு அருகே கார் தொழிற்சாலை அமைந்தால், அதை வெளிநாடுகள் அல்லது வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால் அதற்கு ஜம்போ ஜெட் விமானம் மதுரையில் இறங்க வேண்டும். அதற்கு விமானநிலையத்தின் ஓடுதளத்தை 12,500 அடியாக நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தினோம். இத்திட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டது. புதிய முனையத்தில் 17,500 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட டெர்மினல் பில்டிங், புதிய கட்டடங்கள் இயற்கையான வெளிச்சம் பரவும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதனால் பயணிகள் திறந்தவெளியில் இருப்பது போன்ற உணர்வு இருக்கும். செக்கிங் ஹால், இமிகிரேஷன் ஹால், 350 கார்கள் நிறுத்தும் அளவிற்கு கார் பார்க்கிங் வசதி, 6 எஸ்கலேட்டர், ஆறு லிப்ட் வசதி, எக்ஸ்ரே மெஷின்கள்,
பார்வையாளர்கள் நுழைவுக் கட்டணம் செலுத்தி பார்வையிடும் வசதி வரவேற்கத்தக்கது.

புதிய விமானங்களின் தேவை அதிகரித்து வருவது போல், பயிற்சி பெற்ற விமானிகள், பொறியாளர் கள், நிர்வாகிகள் தேவையும் அதிகரிக்கிறது. இவர்களுக்கான அனைத்து பயிற்சியும் அளிக்க, மதுரையில் விமானவியல் பல்கலை நிறுவ வேண்டும். மதுரையில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவையை துவக்க, மதுரை விமான நிலையத்தை "சுங்கவரிச் சோதனை விமான நிலையமாக' மத்திய அரசு அறிவிக்க வேண்டும். புதிய முனையம் திறக்கப்பட்ட பின், தற்போதுள்ள கட்டடம் சரக்கு போக்குவரத்து வளாகமாக மாற்ற வேண்டும். மதுரையில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய் போன்ற நாடுகளுக்கு நேரடி விமான சேவை ஏற்படுத்த வேண்டும். விமான நிலையத்தில்இருந்து நகருக்கு அரசு பஸ் கழகம் சார்பில் குளிரூட்டப்பட்ட பஸ்களை இயக்க வேண்டும். ஸ்ரீராம் (முன்னாள் தலைவர், டிராவல் கிளப்): விமான நிலையத்தில் சுங்கவரி மற்றும் இமிகிரேஷன் மையங்கள் அமைந்தால் தான், சர்வதேச விமானங்கள் வர முடியும். இம்மையங்களை விரைவில் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருங்குடியில் இருந்து விமான நிலையத்திற்கு செல்லும் சாலையை அகலப்படுத்தி, சீரமைக்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயணிகள் எண்ணிக்கை  அதிகரிக்கும்   : மதுரை விமான நிலையத்திலிருந்து 2008ல் 3,58,806 பேர் பயணித்துள்ளனர். 8653 முறை விமானங்கள் வந்து சென்றுள்ளன.   2011ல் மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு பயணிகள் உட்பட 6.15 லட்சம் பேர் பயணிப்பர் என்றும், 2016ல் 2.36 லட்சம் வெளிநாட்டு பயணிகள் உட்பட 9.17 லட்சம் பேர் பயணிப்பர் என்றும் ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

செய்தி : தினமலர்

 http://www.dinamalar.com/News_Detail.asp?Id=83074

Monday, August 2, 2010

இது தாங்க மதுரை






2 நாள்  - 5ஆயிரம் பார்வையாளர்கள்

Friday, July 2, 2010

இது ஸ்கூல் திறக்கும் சீசன் - மதி கார்ட்டூன்

மதி கார்ட்டூன் தினமணி நாளிதழில் மிகவும் பிரபலம்.
அவருடைய கார்ட்டூன் எல்லாம் புத்தகங்களாக வெளியாகி உள்ளன.

இது ஸ்கூல் திறக்கும் சீசன் ( திறந்து ரொம்ப நாள் ஆச்சு ) அவரோட கார்ட்டூன் இதோ.

Tuesday, June 29, 2010

..

மதுரை முன்னேறாமல் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு பதில் நாம் போக போக பார்போம்.
தொடர்ந்து பதிவு செய்ய முயற்சி மேற்கொள்கிறேன்.

மதுரையில் எதிர் கட்சி தலைவர் சாலை முத்து சஸ்பெண்ட செய்ய பட்டுள்ளதாக செய்தி வந்து உள்ளது ( காரணம் என்னவாக இருக்கும், ஆளும்கட்சி தலைவரை தகாத வார்த்தைகளில் திட்டிடாராம் ..)

மத்தபடி டி வீ எஸ் நகரில் ராமர் கோவில் அருகே பல வருடங்களாக ஒரு விளையாட்டு திடல் இருந்தது. அதை சென்ற வாரம் ஒரு பூங்காவாக அண்ணன் அழகிரி மத்திடாராம்.

சினிமா செய்திகள்.

ராவணன் படம் பாத்தேன். - படம் ஆரம்பிக்கும் போதே போட்டுட்டாங்க .. இது மணிரத்னம் படைப்பு ( A maniratnam Film ).. அவர் எப்படி எடுபரோ..அதே போல் இருந்தது.அவர பாத்து இன்று பல பேர் காப்பி அடிச்சி வந்துட்டாங்க. அதனால அவர் எப்பவும் வித்யாசமான படம் கொடுப்பர். இதுவும் அதே போல.

எனக்கு படம் பிடித்து இருந்தது.
நல்ல படம். நல்ல உழைப்பு. வீண் போகாது.

தல அஜித் மீண்டும் அப்பாவாக போறாராம்.

அவ்ளோ தான்.
எழுத நிறைய இருக்கிறது.
நாளை எழுதுகிறேன்.

Saturday, June 26, 2010

மதுரை முன்னேறாமல் இருப்பது ஏன் ?

மதுரை தமிழகத்தில் ஒரு காலத்தில் மிக பெரிய நகரம், மாவட்டம் என்ற எல்லா சிறப்பும் இதற்க்கு உண்டு. ஆனால் இன்றோ மதுரை மாவட்டத்தை பிரித்து தேனி , விருதுநகர் போன்ற புதிய மாவட்டங்கள் உருவாக்கபட்டன.

மதுரை தொன்று தொட்டு வரும் ஒரு நகரம். மதுரையை சேர்த்தவர்கள் உலகில் எல்லா இடங்களிலும் உள்ளனர். தாங்கள் மதுரை மக்கள் சொல்ல்வதில் மிகவும் பெருமை படுகின்றனர்.

மதுரையில் போதிய வளர்ச்சி இல்லாது ஏன் ?

மதுரையில் படித்த இளைஞர்கள் வேலை தேடி வெளியூர் செல்ல வேண்டி உள்ளது.

மதுரையில் சொல்லும்படியான பெரிய தொழிற்சாலை எதுவும் இல்லை. ஒரு தொழிற்சாலையினால் நேரடியாக மற்றும் மறைமுகமாக பலபேர்க்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழி உண்டு.

கடந்த ஐந்து வருடங்களில் புதிய தொழில் எதுவும் துவங்கவில்லை.

மதுரையில் (IT Park ) தகவல் தொழில் நுட்ப பூங்கா வருகிறது , வருகிறது என்று கூறி ( ரியல் எஸ்டேட் ) நில விலை ஏறியதே மிச்சம்.

ஆனால் மதுரை தவிர நகரங்களான கோவை நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. அங்கு இதனால் நல்ல பணம் புழங்கும் நகரமாக மாறி வருகிறது.

மதுரை முன்னேறாமல் இருப்பது எதனால் ?
இதற்கு பல காரணங்கள் உண்டு. அரசியல்வாதிகள் ( வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றியது இல்லை. அண்ணன் அழகிரி வந்துட்டாரு . மத்திய அமைச்சர் ஆயிட்டாரு மதுரைக்கு எதாவது செய்வாருன்னு பார்த்தல். அவர் பாராளுமன்றம் சென்றே நீண்ட நாட்கள் ஆச்சுன்னு செய்தி வெளியாகுது.

மக்களே நீங்களே சிந்தியிங்கள் .

நீங்கள் உங்கள் கருத்துக்களை இங்கே கூறவும் . நம்மால் முடிந்தது எதாவது செய்வோம்.

Wednesday, June 9, 2010

சினிமா உலகம் 2

ஒரு இயன்குனர்க்கும் தயாரிப்பாளர்க்கும் இருக்க வேண்டிய பரஸ்பர ஒத்துழைப்பு பற்றி பார்த்தோம். இதில்இயக்குனர் பற்றி பார்போம்.

ஒருவன் ஒருவன் முதலாளி ... என்பது போல... தயாரிப்பாளர் தான் முதலாளி .
 மற்றவர் எல்லாம் தொழிலாளி ..

ஒரு இயக்குனர் தான் கதையின் நாயகன். (நிறுவனத்தின் முதன்மை அதிகாரி போல  )
அவர் இல்லையேன் படம் இல்லை. எதுவுமே இல்லை.
சொல்ல போனால் ஒரு இயக்குனர் க்கு தான் கட் அவுட் விக்க வேண்டுமே தவிர நடிகருக்கு அல்ல. ரஜினி கமல் போன்ற நடிகர்கள் நீண்ட நாட்களாக நடித்து தன்னை நிருபித்து உள்ளனர் . அவர்களை தவிர வேற யாருக்கும் முக்கியத்துவம் தருவது முறை ஆகாது.

ஒரு இயக்குனர் தான் கதையை முடிவு செய்கிறார்.
இதை படம் எடுத்தல் மக்கள் ஏற்றுகொள்வர்களா ??
இந்த கதையினால் நாளை என்ன நடக்கும் ?
யாருடைய மணம் புண்படாமல் எடுக்க வேண்டும்.?
தயாரிப்பாளர்க்கு நல்லா பலனை தர வேண்டும் (லாபம்).
மக்கள் விரும்பும் வண்ணம் படத்தை எடுக்க வேண்டும்.
மக்கள் விரும்பும் பாடல்களை தேர்வு செய்ய வேண்டும்
அதில் வரிகள் அர்த்தம் உள்ளதாக இருக்க வேண்டும்.
அதில் நடிக்கின்ற நடிகருக்கு, அனைத்து கலைஞர்களுக்கு  நல்லா எதிர்காலம் ( விருது ) கிடைக்கின்ற வகையில் இருக்க வேண்டும்.
முக்கியமான ஒன்று படம் பார்க்க வருபவர்கள் முகம் சுழிக்க கூடாது. (முக்கியமாக தலைவலி வர கூடாது ) அப்படி இருந்தாலே படம் பாதி வெற்றி பெற்றது என்று சொல்லலாம்.
கலாச்சாரத்தை போற்றாமல் இருந்தால் கூட  பரவ இல்லை- கலாச்சார சீர்கழிவி இருக்க வேண்டாம்.




படத்தில் புதிதாக என்ன செய்கிறோம் என்பது இன்றைய முக்கிய கேள்வி.

இதற்கு தான் எல்லா தொலைக்காட்சிகளிலும் வந்து மணி கணக்கில் பேசி மக்கள் அனைவரையும் திரை அரங்கத்திற்கு இழுக்கின்றனர். இதில் புதுசா இது பண்ணி இருக்கோம், அது பண்ணி இருகிறோம். இது மக்களை முட்டாளாக்க எடுக்கபடும் முயற்சிகள். இது மார்க்கெட்டிங் தந்திரம் தான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் அதுவே அவர்களது தோல்விக்கு வழி வகுத்து விடுகிறது.

ஒரு நல்லா படத்திற்கு விளம்பரம் தேவை இல்லை. ( ஒரு 30 நிமிஷத்துக்கு ஒரு முறை தங்களது தொலைகாட்சியில் விளம்பரம் செய்வது அவசியம் இல்லாத ஒன்று )

இதோ ஒரு உதாரணம். விளம்பரம் ஒரு பக்கம் ( தனக்கு சாதகமான முறையில் ) ஆனால் என்ன நடந்தது என்று எல்லாருக்கும் தெரியும்.



Tuesday, June 8, 2010

சினிமா உலகம் 1

ஒரு திரைப்படம் உருவாக காரணமாக இருப்பவர்கள் யார் யார் என்று ஏற்கனேவே பார்த்தோம்.

இதில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பற்றி பார்போம்.

ஒரு திரைப்படம் வெற்றியடைய பல காரணம் உண்டு. அதன வெற்றி மற்றும் தோல்விக்கான அதிக பொறுப்பு ஒரு இயன்குனரையே சேரும்.

வெற்றி பெற்றால் அது நடிகரன் படம் என்றும் . வெற்றி பெற வில்லை என்றால் இயக்குனர் சரி இல்லை என்றும் சொல்ல கூடாது.

ஒரு நடிகன் என்பவன் இயக்குனர் சொல்லவதை கேட்டு அவர் விரும்பும் வண்ணம் படத்தை உருவாக்க உதவி செய்பவர்களில் ஒருவன். திரைபடத்தின் பின்னால் உழைப்பவர்கள் பல பேர் இருந்தும் நடிகற்கே அதிக சம்பளம்  என்பது வேதனைக்குரிய விஷயம்.

ஒரு இயங்குனர் தனது ஆற்றலளால் ஒரு படத்தின் கதையை உருவாக்குகிறார். அதற்கு திரைகதை அமைக்கிறார். அதை தயாரிக்க பணம் நிறைய தேவைப்படுகிறது. அப்போது தான் ஒரு தயாரிப்பாளரிடம்  கதை சொல்லுகிறார். அவர் இந்த படத்தில் தனது  பணத்தை முதலீடு செய்கிறார்.
இயக்குனர்க்கு இதனால் அதிக சம்பளம். அவருக்கு பொறுப்புகளும் அதிகம்.
அவர் எண்ணுவது போன்று படம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு தயாரிப்பாளரிடம் நல்ல ஒத்துழைப்பு வேண்டும்.

ஒரு இயக்குனர் தான் நினைப்பது போன்று படம் எடுப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. ஒரு நல்லா கதை இருந்தாலும் அதை தயாரிக்க ஒரு தயாரிப்பாளர் முன் வர வேண்டும். இது ஒரு வியாபாரம் ஆகிவிட்ட காரணத்தினால் தயாரிப்பாளர் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பார்ப்பது எப்படி என்று தான் பார்க்கின்றனர். இதனால் இயக்குனர் தான் நினைப்பது போன்று ஒரு காட்சி படமாக்கவோ அல்லது மிகுந்த பொருட்செலவில் ஒரு காட்சி அமைப்பது சில சமயம் நடக்காமல் போய் விடுகிறது.

நாம் பல படங்களின் பூஜை பார்த்து இருப்போம். அதில் சில படங்கள் பாதியில் நின்று போய் இருக்கும். ஏன் என்று கேட்டல் தயாரிப்பாளர்ரிடம் பணம் இல்லை. இயக்குனர் விலகி விட்டார்  என்று பல செய்திகள் அடி படும்.

இதனால் தான் இன்று பல பெரிய இயக்குனர்கள்  தாங்களே ஒரு தயாரிப்பாளர் ஆகிஉள்ளனர். உதாரணத்திற்கு திரு. மணிரத்னம் அவர்கள் எடுத்த எல்லா படங்களுமே அவர் அண்ணன் ஜீ. வெங்கடேசன் அல்லது அவரது மெட்ராஸ் டாக்கீஸ் தான் தயாரிக்கும். ஏன் என்றால் ஒரு படம் நல்லா முறையில்  இயக்குனர் நினைத்தது போன்று படம் செய்ய ஒரு நல்ல தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும். அவர் ஒரு நல்லா தயாரிப்பாளர் என்பதை விட நல்ல பொறுமைசாலியாக இருக்க வேண்டும். அவரது பணத்தில் ஆட்டம் போடும் எல்லாத்தையும் பார்த்து, அவர் பொறுமை காப்பது மிக மிக அவசியம்.

ஒரு இயக்குனர் முதல் படம் இயக்க ஒரு தயாரிப்பாளர் கிடைப்பது மிக மிக கடினம். எல்லா பெரிய இயக்குனர்களும் அவர்களது வாழ்கையை பற்றி சொல்லும் போதும் இதை பற்றி கண்டிப்பாக சொல்லுவார்கள். என் என்றால் இது அவ்ளோ லேசு பட்ட காரியம்அல்ல.

ஒரு வாய்ப்பு கிடைப்பது ( என்பது தயாரிப்பாளர் கிட்ட கதை சொல்ல ) என்பது மிக மிக கடினம். அதிலும் அந்த தயாரிப்பாளர் கேட்ட பிறகு  கதையில் தலையிடலாம் இருப்பது அதை விட மிக கடினம்.

இதனாலே பல பிரச்சனைகள் உருவாகிறது. தனக்கு தெரிந்த நடிகர் அல்லது நடிகை தேர்வு செய்ய வேண்டும், கதை கொஞ்சம் மாற்ற வேண்டும், செலவு கொஞ்சம் குறைக்க வேண்டும். குறுகிய காலத்துள் முடிக்க வேண்டும்.
எப்படி பல பிரச்சனைகள் எழும்.

இதனாலே பல இயங்குனர்கள் தானே தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து பல புதிய இயக்குனர்க்கு வாய்ப்புஅளிக்கின்றனர்.



கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைபடத்தில் வரும்  ஒரு காட்சி. இதில் அஜித் ஒரு புதிய இயங்குனர் அவரோட உணர்ச்சிகளை  நீங்கள் காணலாம். ( எதோ நான் சொன்ன கதைக்கு ஒத்து வரும் சீன்)

இப்படிசினிமா பற்று எழுதினால் எழுதிகிட்டேபோகலாம் .
நிறைய இருக்கிறது... தொடரும்.

Monday, June 7, 2010

சினிமா உலகம்

சினிமா - இந்த மூன்று எழுத்து பலரது தூக்கங்களை கலைந்துள்ளது.
இந்த உலகத்தை ஆட்டி படைக்கிறது. சினிமா பார்க்காதவர்கள் மிக குறைவு.
எங்கோ நடப்பதை நமக்கு காட்டுகிறது. நமக்குள் நடப்பது போல் ஒரு உணர்வை  தூண்டுகிறது. நம்மில் ஒரு பாதிப்பை உண்டாக்கிறது.

இந்த சினிமாவில் நுழைந்து பெரிய நடிகன் , நடிகை, இயக்குனர், நடன இயக்குனர் ஆவதே பலரது லட்சியம். அதை ஊக்குவிப்பது போன்று இன்று பல நிகழ்ச்சிகள் வந்து உள்ளன .

1. ஏர்டெல் சூப்பர் சிங்கர்
2. உங்களில் யார் அடுத்த பிரபு தேவா
3. நாளைய இயக்குனர்

இது போல் அடுத்து வரும் காலங்களில் யார் அடுத்த விஜய், அஜித், சிம்பு , சிம்ரன், ஏ ர் ரஹ்மான் , இளையராஜா ,பி சி ஸ்ரீராம் , வாலி, வைரமுத்து, தோட்டாதரணி, சாபு சிரில், ஜாக்குவார் தங்கம், கனல் கண்ணன் இப்படி போய் கிட்டே இருக்கும்.

ஏன் எப்படி ?
சினிமாவின் மீது காதல் கொண்டவர்கள் இந்த ஊரில் அதிகம்.
சினிமாவை வெறும் ஒரு ஊடகமாக பார்க்கலாம் அதை ஒரு மிக பெரிய பணம் செய்யும் வித்தை என்பதை பலரும் அறிவார்கள்.

ஒரு சினிமா என்பது பல ஆயிரகணக்கான மக்கள் உழைப்பில் , பல கோடி பேர் கண்டுகளிக்க கூடியது. இதில் யார் யார் உழைக்கிரார்கள். அதில்  அவர்களது பங்கு என்ன என்பதை பற்றி இங்கு பார்போம். இதில் உழைப்பவர்களுக்கு எல்லாம் தக்க சன்மானம் கிடைக்கிறதா ??


ஒரு திரைப்படம் உருவாக காரணமாக இருப்பவர் இயக்குனர்.
இயக்குனர்  - அந்த படத்தின் கதை, திரைக்கதை முடிவு செய்கிறார்.
        இவர் தலைமையில் உதவி இயக்குனர்கள் பணி செய்வர்.
ஒளிபதிவாளர் - அந்த படத்தை பதிவு செய்கிறார்.
        இவர் தலைமையில் உதவி ஒளிபதிவாளர் பணி செய்வர்.
இசை அமைப்பாளர் - பின்னணி இசை மற்றும் பாடல்கள்.
        இவர் கவிஞர்,பாடகர்கள்,இசை கருவி இயக்குபவர்கள் என்று பல பேர் கூட்டணியில் தான் பாடல்கள் உருவாகிறது.
 கலை இயங்குனர்
ஒலிப்பதிவாளர் 
 நடன ஆசிரியர்
சண்டை காட்சி அதற்கு ஒரு அமைப்பாளர்.
நடிகர் ,நடிகை , துணை நடிகர்கள் என்று பல பேர் உழைப்பில் உருவாவது தான் சினிமா.

இதை உருவாக்குவதில் ஒரு தயாரிப்பாளர் தனது பணத்தை முதலீடு செய்கிறார்.

தமிழகத்தில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால் . அது தமிழ் நாட்டில் உள்ள ஆறு கோடி மக்கள் பார்க்கின்றனர்.

எல்லாரும் படம் பார்ப்பது இல்லை. ஆனால் சிலர் ஒரு படத்தை நான்கு, ஐந்து முறை பார்பதினால். சராசரியாக அனைவரும் பார்கிறார்கள் என்று கணக்கிட்டு கொள்ளலாம்.

ஒரு சராசரி படம் ( பெரிய நடிகர் படம் இல்லை )
6 கோடி மக்கள்   10  ரூபாய் செலவு செய்து படம் பார்த்தல் = 60 கோடி ரூபாய்

இது டிக்கெட் வருமானம் மட்டுமே.
இதை தவிர இசை தட்டு விற்பனை, வெளிநாடு விற்பனை, இசை தட்டு வெளியுடு என்று ஒரு விழா நடத்தி அதை ஒரு தனியார் தொலைகாட்சி நிறுவனத்திற்கு விற்பனை, மற்றும் தொலைகாட்சி உரிமம் , பாடல் உருமம் என்று பல வழிகளில் பணம் செய்ய படிக்கிறது.

இதில் ஒவ்வொரு துறை வரியாக பார்போம்.
தொடரும்.

Sunday, May 30, 2010

செம்மொழியான தமிழ்மொழியே - வீடியோ

செம்மொழியான தமிழ்மொழியே
 
கோவையில் நடைபெற இருக்கும் தமிழ் மாநாட்டிற்கு ரஹ்மான இசையில், மு.கருணாநிதி எழுத்தில் , கௌதம் மேனன் இயக்கிய பாடல் இதோ உங்களுக்காக.

இதில் பாடியவர்கள்
டி.எம்.சௌந்தரராஜன் , ரஹ்மான்,ஹரிணி ,சின்மயி ,ஹரிஹரன் ,கார்த்திக், யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீனிவாஸ்,பம்பாய் ஜெயஸ்ரீ , அனுராதா ஸ்ரீராம், விஜய் யேசுதாஸ்,  சுசிலா , சிவமணி , நித்யஸ்ரீ மகாதேவன் , காயத்ரி , நரேஷ் ஐயர் , சௌம்யா ,  ஸ்ருதி ஹசன், ப்ளாஸ் ( என்ற லக்ஷ்மி நரசிம்ஹா விஜய ராஜகோபால சேஷாத்ரி ஷர்ம ராஜேஷ் ராமன் ) மற்றும் சில நாட்டுப்புற பாடல் கலைஞர்கள்


நடித்தவர்கள் : அங்காடி தெரு அஞ்சலி , மகேஷ். மற்றும் பலர்.


இதை தமிழ்நாட்டில் சிறப்பு மிக்க இடம்களில் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
ராமேஸ்வரம், மதுரை. மகாபலிபுரம்,அய்யன் திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி. மலைகோட்டை மற்றும் ஒயிலாட்டம், சிலம்பாட்டம் , பொய்கால் குதிரை, ஐயனார் சிலை   போன்ற தமிழ்நாட்டின் சிறப்புமிக்க எல்லா அம்சங்களையும் சேர்த்து உள்ளனர்.


கடைசியில் கலைஞர் மு. கருணாநிதி கையப்பம் இடுவது போன்ற ஒரு காட்சியில் வருகிறார்.







Saturday, May 29, 2010

சிங்கம் திரை விமர்சனம்

சிங்கம் திரை விமர்சனம்

நீண்ட நாள் கழித்து தமிழில்ஒரு நல்ல படம் வந்து இருக்கிறது.
பார்க்க நல்ல படம். மொத்தத்தில்  ஒரு மசாலா திரைப்படம்

சூர்யாவின் 25 வது படம்.
கில்லி, காக்க காக்க மற்றும் சாமி ஆகிய படங்களின்  சாயல் கொஞ்சம் இருக்கிறது.
ஆனால் படம் கொஞ்சம் வித்தியாசமாக படைத்திருக்கிறார் இயக்குனர் ஹரி.

படத்தில் வரும் சூர்யா நன்றாக நடித்து இருக்கிறார். அனுஷ்கா நன்றாக நடித்து இருக்கிறார். ஆனால் இவர்களுக்கு ஒரு பொருத்தம் இல்லை,.  அனுஷ்கா சூர்யா விட உயரம் அதிகம் என்பது சில இடங்களில் நன்றாக தெரிகிறது.

படத்தில் விவேக் ரொம்ப வெட்டியாக வந்து செல்கிறார். சிரிக்க வைக்கவேண்டும் என்று பகீரத முயற்சி செய்கிறார்.

வில்லனாக பிரகாஷ் ராஜ் எப்பவும் போல் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்.
படத்தின்  2 வது பாதி அசுர வேகத்தில் செல்கிறது.  மக்கள் யோசிக்க நேரம் தர கூடாது என்று இயக்குனர் நினைத்து இருக்கிறார்.

நிறைய காட்சிகள் வேகமாக  (fast forward)  செல்கிறது.
ஒளிபதிவாளர் பிரியன் ஹரியுடன் சாமி மற்றும் வேல் செய்தவர் .
வழக்கமாக  ஒரு நெடிய ( Long Shot ) காட்சி கிரேன் உபயோகித்து எடுப்பார்கள்.
இதில் அது போல் பல காட்சிகள்.திருவான்மியூர் மற்றும் சென்னை சேர்ந்த காட்சிகள் ஏரியல் (aerial view) அதிகம் பயன் படுத்தி இருகின்றனர்.

இசை தேவி ஸ்ரீ பிரசாத் ... பரவாஇல்லை எதோ முயற்சி செய்து இருக்கிறார்.

வழக்கமாக ஹரி படத்தில் வரும் எல்லாமே இங்கும் உண்டு.
வீடு, கிராமம், சொந்த பந்தம், அருவாள் இதில் உண்டு. 

வசனம் மிகவும் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், அதே சமயம் அன்பாக பேசி திருத்துவது போலவும் எழுதி இருக்கிறார்.


படத்தின் சிறப்பு அம்சங்கள்

- திரை கதை ஓட்டம், பட தொகுப்பு.
- இயக்குனர் ஹரி 
- சூர்யா, பிரகாஷ் ராஜ்  நடிப்பு


எதிர்பாத்து ஏமாந்த விஷயங்கள்
- பாடல்கள் ( ஒபெனிங் பாடல் ) எல்லா ஹரி படங்களிலும் நன்றாக இருக்கும்
சோடாபாட்டில் கையிலே - ஆறு ,
திருநெல்வேலி அல்வாடா - சாமி ,
இந்த ஊரில் எப்பவுமே கேட்டதே நடக்காதுடா - வேல்

அந்த வரிசையில் பாடல் இல்லை.

மொத்தத்தில்
ஹரி - சூர்யா கூட்டணியில் மற்றும் ஒரு வெற்றி படம்.

சிங்கம் - தனி காட்டு ராஜா

Wednesday, May 12, 2010

மாம்போ மார்ட்

தமிழகத்திற்கு ஒரு வலைத்தளம் அங்காடி .



Sunday, May 9, 2010

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

இன்று அன்னையர் தினம் . அன்னையின் பண்புகள் அனைவருக்கும் தெரிந்ததே.
அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

இதனால் தான் எல்லா படங்களிலும் தாயை பற்றி கூறுகின்றனர்.

அன்னையும் தந்தையும் -  ஹரிதாஸ் மூத்த தமிழ் படம் பாடல் உங்களுக்காக



மக்கள் திலகம் எம் ஜி ஆர் பாடல்





ரஜினி பாடல் எல்லாருக்கும் தெரிந்தது


கமல் பாடல்



அன்று முதல் இன்று வரை தாய் நாடு , தாய் வீடு , தாய் மண் , தாய் மொழி என்று எல்லாவற்றிலும் தாய் இருக்கிறாள்.

Saturday, May 8, 2010

கிருஷ்ணன் - (CNN Heroes) - மதுரையின் நாயகன்

கிருஷ்ணன் என்பவர் மதுரையில் அக்ஷய டிரஸ்ட் நடத்தி வருகிறார்.  இவரை நான் நிறைய கேள்வி பட்டு இருக்குறேன் . எனது தந்தை கூட சில சமயம் இவரை மதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள நடை பாதையில் உணவு வழங்கும் போது பார்த்து இருக்கிறார். தற்போது இவர் அமெரிக்க CNN தொலைகாட்சியின் " THE HERO"  - நாயகன் ( தமிழ்பட கதாநாயகன் இல்ல ) உண்மையான நாயகன் என்ற தலைப்பில் இவரை பற்றி எழுதி உள்ளனர் . அமெரிக்க வரை  போய் உள்ள இந்த செய்தி.



இவரை பற்றி இட்லிவடை அன்றே சொன்னது ... எதோ உங்களுக்காக அந்த செய்து.  தேதி ஆகஸ்ட் 15.. 2009

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் , வாடினேன்" என்று பாடினார் வள்ளலார். பயிர்கள் வாடுவதையே தாங்கமுடியாத மனம்..உயிர்கள் வாடுவதை தாங்கமுடியுமா ? இப்படிப்பட்ட மனம் நடைமுறையில் சாத்தியமா? இதற்கு விடை தெரிந்துக்கொள்ள கீழே படிக்கவும்....

இந்தகாலத்திலும் வள்ளலார் மனம் கொண்ட ஒருவர் நம்மிடையே இருக்கிறார்.
அவர் மதுரை N.கிருஷ்ணன். CNN-IBN மற்றும் Reliance நிறுவனங்கள் இந்தியா முழுவதும் சமூகத்தில் 'நிஜ கதாநாயகர்களை' அடையாளம் கண்டு வருடந்தோறும் விருது வழங்கிவருகிறது. அந்த விருதை தனது தன்னலமற்ற சமூக சேவைகளுக்காக இந்த வருடம் பெற்று இருக்கிறார் திரு.கிருஷ்ணன்.

அப்படி என்ன செய்கிறார் கிருஷ்ணன்?
”நான் பிச்சைக்காரர்களுக்கு உண்வு கொடுப்பதில்லை. அவர்களை அவர்களே கவனித்துக்குக் கொள்வார்கள்.மனநிலை குன்றியவர்கள் தான் யாரிடமும் உணவோ, காசோ கேட்க தெரியாது. அவர்களுக்கு உதவுகிறேன்” என்கிறார் கிருஷ்ணன்.

யார் இந்த கிருஷ்ணன்?

மதுரை மாநகர தெருக்களில், மனநிலை குன்றிய 400 பேருக்கு வருடம் 365 நாட்களும், நாளுக்கு மூணு வேளையுமாக உணவு வழங்கிக் கொண்டு இருக்கும் இவருக்கு அப்படி ஒன்றும் வயதாகி விடவில்லை. வெறும் 28 தான். கடந்த ஏழு வருடங்களாக, அக்‌ஷ்யா டிரஸ்ட் என்னும் தொண்டு நிறுவனம் மூலமாக இதை செய்து வருகிறார்.

பெங்களூருவின் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில், சமையலை தொழிலாக(
செஃபாக) செய்து வந்த அனுபவம் கைகொடுத்து இருக்க வேண்டும். சுத்ததிலும், பாத்திரங்கள் பளபளவென்று அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் நேர்த்தியிலும , அரிசி பருப்பு, காய் கறி, மசாலா சாமான்களின் தரத்திலும் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் சமையலறையை ஒத்திருக்கிறது கிருஷ்ணனின் சமையலறை.

”தினமும் மெனுவை மாற்றி விடுவேன்.ஒரெ உணவை சாப்பிட்டால் அவஙகளுக்கு சலித்து போயிடுமில்ல?” உற்சாகமான அவருடைய புன்னகை நம்மை எளிதில் தொற்றிக்கொள்கிறது.

இரண்டு சமையல்காரர்களின் உதவியோடு, தினமும் மூன்று வேளையும் சமைத்து, தன் வளர்ப்பு மக்களை தேடி தெருத்தெருவாக தானே எடுத்து செல்கிறார்.மனநிலை குன்றியவர்கள அடிக்கடி இடம் பெயர்வதில்லையாம், தினமும் அதே இடத்தில் தான் சந்திக்கிறாராம்.

ஒரு பெரிய பாத்திரத்தில் தயிர் சாதமும், சிறியது ஒன்றில் ஊறுகாயுமாக, ஒரு மாருதி வேனில் கிளம்புகிறார். வேன்? மதுரையின் ஒரு தயாளர் தானமாக கொடுத்தது. பத்து நிமிட பயணம். வேன், ஒரு சுவரின் அருகில் படுத்து இருக்கும் மனிதரின் அருகில் நிற்கிறது,கிருஷ்ணன் தயிர்சாதத்தை அவர் அருகில் வைக்க, அவர் அதை சீண்டக்கூட இல்லை. தண்ணீர் பாட்டிலை வாங்கி மட மட என்று குடிக்கிறார்.”பாவம் ரொம்ப தாகம். கொஞ்சம் கழித்து சாப்பிடுவார்” இது கிருஷ்ணன் சொன்னது.

வேனின் அடுத்த நிறுத்தம். தானே இலையில் சாதம் போட்டு, கொஞ்சம் எடுத்து ஒரு மனிதருக்கு ஊட்டியும் விடுகிறார். இரண்டு கவளத்துக்கு பிறகு அவர் தன்னாலேயே சாப்பிட ஆரம்பிக்கவும், கிளம்பி, அடுத்து ஒரு ட்ராஃபிக் சிக்னல். அழுக்கும், கிழிசலும், தாடியுமாக அந்த கூட்டத்தில் தனியாக தெரிந்த நாலு பேர், வேனை நோக்கி வருகிறார்கள். அவர்களிடம் எந்த் பரபரப்பும் இல்லை, “இந்த வேன் வந்தால் சாப்பாடு, கிருஷ்ணன் அவர்களுக்கு காத்திருப்பார்” என்பதை அவர்களுடைய மனது அறிந்தே இருக்கிறது.
”அவர்களுக்கு தனக்கு தானே தண்ணீர் கூட எடுத்துக் கொள்ள தெரியாது” ஒரு மரத்தடியில் அவர்களுக்கு சாப்பாடு பரிமாறி, தண்ணீரும் தந்து கொண்டே சொல்கிறார்.

அக்‌ஷய பாத்திரம் காலி ஆகும் வரை நகர்வலம் வருகிறது கிருஷ்ணனின் மாருதி வேன். மீண்டும் இரவு உணவுக்கு பாத்திரம் நிறையும். பயணம் துவங்கும்.

இத்தனைக்கும் சாப்பிட்ட ஒருவர் கூட கிருஷ்ணனுக்கு நன்றி சொல்வதில்லை. நன்றி என்ன நன்றி? ஒரு புன்னகை? ஒரு தலையசைப்பு? ஒன்றும் கிடையாது. அவரவர் வேலைகளை செய்வதற்கே நாமெல்லாம் நன்றியை எதிர்பார்க்கும் இந்த காலத்தில்,கிருஷ்ணன் பாட்டுக்கு அவர் பணியை தொடர்கிறார்.

ஒரு நாளைக்கு 12000 ரூபாய் செலவு ஆகிறதாம். “மாதத்தில் 22 நாட்களுக்கு ”Donars” இருக்கிறார்கள். மீதி நாட்களை நானே சமாளிக்கிறேன்” அயராமல் சொல்வதோடு, “மீதி நாட்களுக்கும் கூடிய விரைவில் கிடைத்து விடுவார்கள்” என்னும் குரலில் ஏராளமான நம்பிக்கை.அக்கவுண்டுகளை வெகு சிரத்தையாக கையாள்கிறாராம். அக்‌ஷயா ஆரம்பித்த பிறகு, முதன்முதலாக,பலசரக்கு வாங்கிய ரசீதை செண்டிமெண்டாக வைத்து இருக்கிறார்.பொருளாதார வீழ்ச்சி இவரையும் விட்டு வைக்க வில்லை, 25 ஆக இருந்த Donars, 22 ஆக குறைந்து போய் இருக்கிறார்க்ள்.

இன்ஃபோஸிஸ், டிவிஎஸ் நிறுவனங்கள் இவருடைய சேவைக்காக 3 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்க, அதில் ஒரு காப்பகம் அமைக்க திட்டம் இட்டு, முதலில் 80 பேர் தங்கும் அளவில் ஒரு பெண்கள் பகுதிக்கு அடித்தளம் மாத்திரம் கட்டிய நிலையில், நிதி தட்டுப்பாட்டினால், அப்படியே கிடப்பில் இருக்கிறது.

கிருஷ்ணனின் எல்லை உணவு கொடுப்பதோடு முடிந்து விடவில்லை.இன்னும் பரந்து இருக்கிறது. கேட்பாரற்று இருக்கும் அனாதை பிணங்களுக்கு இறுதி சடங்கு செய்யும் பணியையும் செய்து வருகிறார் கிருஷ்ணன்.பிணத்தை claim செய்து, குளிப்பாட்டி, உரிய முறையில் நல்லடக்கம் தருவதுமாக இருக்கும் இவரை, மதுரை முனிசிபாலிடியில் இருந்தும், பொது மருத்துவமனையில் இருந்தும், இறுதி சடங்கு செய்ய சொல்லி அழைக்கிறார்கள்.

நம் தேசபிதா காந்தியை கதராடை கட்டவைத்து 'மகாத்மா' ஆக காரணமாக இருந்த மதுரையே இவரது மாற்றத்திற்கும் காரணம். இப்படி இப்பட்செய்ய தூண்டியது ? என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு நினைவு கூர்கிறார் "பெங்களூருவில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிந்த நான், வெளிநாடு செல்வதற்கு முன் சொந்த ஊர் மதுரைக்கு வந்தேன். டாக்ஸியில் ஏர்போர்ட் செல்லும் போது மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு முதியவர் தன் மலத்தை தானே உண்ணும் அவலத்தை பார்த்து பதறி அடித்து அருகில் இருந்த ஹோட்டலுக்கு ஓடி, அவருக்கு பத்து இட்லி வாங்கி கொடுத்தேன். அரக்க பரக்க சாப்பிட்டு முடித்த அவர் என்னை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார். அந்த சிரிப்பு தான் என்னை மீண்டும் மீண்டும் செய்ய தூண்டியது, அதன்பின், இத்தகையவர்களுக்கு உணவிடுவதே தன் தொழில் என முடிவு செய்துவிட்டேன்".

இவ்ருக்கு இன்னும் திருமணமாக வில்லை. "நாள் முழுக்க மற்றவர்களுக்கு சமைத்து கொண்டு இருக்கும் என்னை யார் கல்யாணம் செய்து கொள்வார்கள்?" என்று கேட்கிறார்.தன்னை திருமணம் செய்து கொள்பவர்,அவருடைய இந்த வாழ்க்கை முறைக்கு ஒத்து வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.ஆரம்பத்தில் அதிர்ச்சியான இவருடைய பெற்றோர்கள் கூட இப்போது இவருக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள்.


ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பார்த்துக்கொண்டு இருந்த வேலையை விட்டு விட்டு, மனனலம் குன்றியவர்களுக்கு சமையலும், அனாதை பிணங்களுக்கு காரியமும் செய்கிறீர்க்ளே? என்று ஆதங்கப்படுபவர்களுக்கு இவரது பதில், “எனக்கு இது பிடித்து இருக்கிறது”.

இவர் மதுரையில் நடத்திவரும் அக்க்ஷயா ட்ரஸ்ட் சேவைமையத்திற்கு ஏழு வயதாகிறது.

தன் வயிறுபசித்தால் பாலுக்குகூட அழதெரியாத மனநலம் குன்றிய
குழந்தைகளுக்கு தேடிபோய், தானே சமைத்து உணவிடும்
'தாயுமான' கிருஷ்ணனுக்கு, உதவி செய்துவரும் பல கரங்களோடு,
இந்த நன்னாளில் நம் கரங்களையும் இணைப்போம்.
எல்லோருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
ஜெய்ஹிந்த்.


நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஓருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை - ஔவையார்



தகவல்/படங்கள் உதவி:
http://news.rediff.com/slide-show/2009/aug/12/slide-show-1-he-gave-up-a-5-star-job-to-feed-the-mentally-ill.htm
http://www.akshayatrust.org/

பிகு: இந்த கட்டுரையை எழுத தூண்டிய குரு பிரசாத்துக்கும், இதை தமிழில் எழுத உதவிய இரண்டு நண்பர்களுக்கும் என் நன்றி.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
http://idlyvadai.blogspot.com/2009/08/blog-post_15.html
http://edition.cnn.com/2010/LIVING/04/01/cnnheroes.krishnan.hunger/index.html