Saturday, May 29, 2010

சிங்கம் திரை விமர்சனம்

சிங்கம் திரை விமர்சனம்

நீண்ட நாள் கழித்து தமிழில்ஒரு நல்ல படம் வந்து இருக்கிறது.
பார்க்க நல்ல படம். மொத்தத்தில்  ஒரு மசாலா திரைப்படம்

சூர்யாவின் 25 வது படம்.
கில்லி, காக்க காக்க மற்றும் சாமி ஆகிய படங்களின்  சாயல் கொஞ்சம் இருக்கிறது.
ஆனால் படம் கொஞ்சம் வித்தியாசமாக படைத்திருக்கிறார் இயக்குனர் ஹரி.

படத்தில் வரும் சூர்யா நன்றாக நடித்து இருக்கிறார். அனுஷ்கா நன்றாக நடித்து இருக்கிறார். ஆனால் இவர்களுக்கு ஒரு பொருத்தம் இல்லை,.  அனுஷ்கா சூர்யா விட உயரம் அதிகம் என்பது சில இடங்களில் நன்றாக தெரிகிறது.

படத்தில் விவேக் ரொம்ப வெட்டியாக வந்து செல்கிறார். சிரிக்க வைக்கவேண்டும் என்று பகீரத முயற்சி செய்கிறார்.

வில்லனாக பிரகாஷ் ராஜ் எப்பவும் போல் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்.
படத்தின்  2 வது பாதி அசுர வேகத்தில் செல்கிறது.  மக்கள் யோசிக்க நேரம் தர கூடாது என்று இயக்குனர் நினைத்து இருக்கிறார்.

நிறைய காட்சிகள் வேகமாக  (fast forward)  செல்கிறது.
ஒளிபதிவாளர் பிரியன் ஹரியுடன் சாமி மற்றும் வேல் செய்தவர் .
வழக்கமாக  ஒரு நெடிய ( Long Shot ) காட்சி கிரேன் உபயோகித்து எடுப்பார்கள்.
இதில் அது போல் பல காட்சிகள்.திருவான்மியூர் மற்றும் சென்னை சேர்ந்த காட்சிகள் ஏரியல் (aerial view) அதிகம் பயன் படுத்தி இருகின்றனர்.

இசை தேவி ஸ்ரீ பிரசாத் ... பரவாஇல்லை எதோ முயற்சி செய்து இருக்கிறார்.

வழக்கமாக ஹரி படத்தில் வரும் எல்லாமே இங்கும் உண்டு.
வீடு, கிராமம், சொந்த பந்தம், அருவாள் இதில் உண்டு. 

வசனம் மிகவும் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், அதே சமயம் அன்பாக பேசி திருத்துவது போலவும் எழுதி இருக்கிறார்.


படத்தின் சிறப்பு அம்சங்கள்

- திரை கதை ஓட்டம், பட தொகுப்பு.
- இயக்குனர் ஹரி 
- சூர்யா, பிரகாஷ் ராஜ்  நடிப்பு


எதிர்பாத்து ஏமாந்த விஷயங்கள்
- பாடல்கள் ( ஒபெனிங் பாடல் ) எல்லா ஹரி படங்களிலும் நன்றாக இருக்கும்
சோடாபாட்டில் கையிலே - ஆறு ,
திருநெல்வேலி அல்வாடா - சாமி ,
இந்த ஊரில் எப்பவுமே கேட்டதே நடக்காதுடா - வேல்

அந்த வரிசையில் பாடல் இல்லை.

மொத்தத்தில்
ஹரி - சூர்யா கூட்டணியில் மற்றும் ஒரு வெற்றி படம்.

சிங்கம் - தனி காட்டு ராஜா

1 comments:

வவ்வால் said...

Maduraiku antha pakkam ithu pola padam than super padam! Vilanginapola than.

Post a Comment