Showing posts with label madurai. Show all posts
Showing posts with label madurai. Show all posts

Saturday, May 8, 2010

கிருஷ்ணன் - (CNN Heroes) - மதுரையின் நாயகன்

கிருஷ்ணன் என்பவர் மதுரையில் அக்ஷய டிரஸ்ட் நடத்தி வருகிறார்.  இவரை நான் நிறைய கேள்வி பட்டு இருக்குறேன் . எனது தந்தை கூட சில சமயம் இவரை மதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள நடை பாதையில் உணவு வழங்கும் போது பார்த்து இருக்கிறார். தற்போது இவர் அமெரிக்க CNN தொலைகாட்சியின் " THE HERO"  - நாயகன் ( தமிழ்பட கதாநாயகன் இல்ல ) உண்மையான நாயகன் என்ற தலைப்பில் இவரை பற்றி எழுதி உள்ளனர் . அமெரிக்க வரை  போய் உள்ள இந்த செய்தி.



இவரை பற்றி இட்லிவடை அன்றே சொன்னது ... எதோ உங்களுக்காக அந்த செய்து.  தேதி ஆகஸ்ட் 15.. 2009

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் , வாடினேன்" என்று பாடினார் வள்ளலார். பயிர்கள் வாடுவதையே தாங்கமுடியாத மனம்..உயிர்கள் வாடுவதை தாங்கமுடியுமா ? இப்படிப்பட்ட மனம் நடைமுறையில் சாத்தியமா? இதற்கு விடை தெரிந்துக்கொள்ள கீழே படிக்கவும்....

இந்தகாலத்திலும் வள்ளலார் மனம் கொண்ட ஒருவர் நம்மிடையே இருக்கிறார்.
அவர் மதுரை N.கிருஷ்ணன். CNN-IBN மற்றும் Reliance நிறுவனங்கள் இந்தியா முழுவதும் சமூகத்தில் 'நிஜ கதாநாயகர்களை' அடையாளம் கண்டு வருடந்தோறும் விருது வழங்கிவருகிறது. அந்த விருதை தனது தன்னலமற்ற சமூக சேவைகளுக்காக இந்த வருடம் பெற்று இருக்கிறார் திரு.கிருஷ்ணன்.

அப்படி என்ன செய்கிறார் கிருஷ்ணன்?
”நான் பிச்சைக்காரர்களுக்கு உண்வு கொடுப்பதில்லை. அவர்களை அவர்களே கவனித்துக்குக் கொள்வார்கள்.மனநிலை குன்றியவர்கள் தான் யாரிடமும் உணவோ, காசோ கேட்க தெரியாது. அவர்களுக்கு உதவுகிறேன்” என்கிறார் கிருஷ்ணன்.

யார் இந்த கிருஷ்ணன்?

மதுரை மாநகர தெருக்களில், மனநிலை குன்றிய 400 பேருக்கு வருடம் 365 நாட்களும், நாளுக்கு மூணு வேளையுமாக உணவு வழங்கிக் கொண்டு இருக்கும் இவருக்கு அப்படி ஒன்றும் வயதாகி விடவில்லை. வெறும் 28 தான். கடந்த ஏழு வருடங்களாக, அக்‌ஷ்யா டிரஸ்ட் என்னும் தொண்டு நிறுவனம் மூலமாக இதை செய்து வருகிறார்.

பெங்களூருவின் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில், சமையலை தொழிலாக(
செஃபாக) செய்து வந்த அனுபவம் கைகொடுத்து இருக்க வேண்டும். சுத்ததிலும், பாத்திரங்கள் பளபளவென்று அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் நேர்த்தியிலும , அரிசி பருப்பு, காய் கறி, மசாலா சாமான்களின் தரத்திலும் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் சமையலறையை ஒத்திருக்கிறது கிருஷ்ணனின் சமையலறை.

”தினமும் மெனுவை மாற்றி விடுவேன்.ஒரெ உணவை சாப்பிட்டால் அவஙகளுக்கு சலித்து போயிடுமில்ல?” உற்சாகமான அவருடைய புன்னகை நம்மை எளிதில் தொற்றிக்கொள்கிறது.

இரண்டு சமையல்காரர்களின் உதவியோடு, தினமும் மூன்று வேளையும் சமைத்து, தன் வளர்ப்பு மக்களை தேடி தெருத்தெருவாக தானே எடுத்து செல்கிறார்.மனநிலை குன்றியவர்கள அடிக்கடி இடம் பெயர்வதில்லையாம், தினமும் அதே இடத்தில் தான் சந்திக்கிறாராம்.

ஒரு பெரிய பாத்திரத்தில் தயிர் சாதமும், சிறியது ஒன்றில் ஊறுகாயுமாக, ஒரு மாருதி வேனில் கிளம்புகிறார். வேன்? மதுரையின் ஒரு தயாளர் தானமாக கொடுத்தது. பத்து நிமிட பயணம். வேன், ஒரு சுவரின் அருகில் படுத்து இருக்கும் மனிதரின் அருகில் நிற்கிறது,கிருஷ்ணன் தயிர்சாதத்தை அவர் அருகில் வைக்க, அவர் அதை சீண்டக்கூட இல்லை. தண்ணீர் பாட்டிலை வாங்கி மட மட என்று குடிக்கிறார்.”பாவம் ரொம்ப தாகம். கொஞ்சம் கழித்து சாப்பிடுவார்” இது கிருஷ்ணன் சொன்னது.

வேனின் அடுத்த நிறுத்தம். தானே இலையில் சாதம் போட்டு, கொஞ்சம் எடுத்து ஒரு மனிதருக்கு ஊட்டியும் விடுகிறார். இரண்டு கவளத்துக்கு பிறகு அவர் தன்னாலேயே சாப்பிட ஆரம்பிக்கவும், கிளம்பி, அடுத்து ஒரு ட்ராஃபிக் சிக்னல். அழுக்கும், கிழிசலும், தாடியுமாக அந்த கூட்டத்தில் தனியாக தெரிந்த நாலு பேர், வேனை நோக்கி வருகிறார்கள். அவர்களிடம் எந்த் பரபரப்பும் இல்லை, “இந்த வேன் வந்தால் சாப்பாடு, கிருஷ்ணன் அவர்களுக்கு காத்திருப்பார்” என்பதை அவர்களுடைய மனது அறிந்தே இருக்கிறது.
”அவர்களுக்கு தனக்கு தானே தண்ணீர் கூட எடுத்துக் கொள்ள தெரியாது” ஒரு மரத்தடியில் அவர்களுக்கு சாப்பாடு பரிமாறி, தண்ணீரும் தந்து கொண்டே சொல்கிறார்.

அக்‌ஷய பாத்திரம் காலி ஆகும் வரை நகர்வலம் வருகிறது கிருஷ்ணனின் மாருதி வேன். மீண்டும் இரவு உணவுக்கு பாத்திரம் நிறையும். பயணம் துவங்கும்.

இத்தனைக்கும் சாப்பிட்ட ஒருவர் கூட கிருஷ்ணனுக்கு நன்றி சொல்வதில்லை. நன்றி என்ன நன்றி? ஒரு புன்னகை? ஒரு தலையசைப்பு? ஒன்றும் கிடையாது. அவரவர் வேலைகளை செய்வதற்கே நாமெல்லாம் நன்றியை எதிர்பார்க்கும் இந்த காலத்தில்,கிருஷ்ணன் பாட்டுக்கு அவர் பணியை தொடர்கிறார்.

ஒரு நாளைக்கு 12000 ரூபாய் செலவு ஆகிறதாம். “மாதத்தில் 22 நாட்களுக்கு ”Donars” இருக்கிறார்கள். மீதி நாட்களை நானே சமாளிக்கிறேன்” அயராமல் சொல்வதோடு, “மீதி நாட்களுக்கும் கூடிய விரைவில் கிடைத்து விடுவார்கள்” என்னும் குரலில் ஏராளமான நம்பிக்கை.அக்கவுண்டுகளை வெகு சிரத்தையாக கையாள்கிறாராம். அக்‌ஷயா ஆரம்பித்த பிறகு, முதன்முதலாக,பலசரக்கு வாங்கிய ரசீதை செண்டிமெண்டாக வைத்து இருக்கிறார்.பொருளாதார வீழ்ச்சி இவரையும் விட்டு வைக்க வில்லை, 25 ஆக இருந்த Donars, 22 ஆக குறைந்து போய் இருக்கிறார்க்ள்.

இன்ஃபோஸிஸ், டிவிஎஸ் நிறுவனங்கள் இவருடைய சேவைக்காக 3 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்க, அதில் ஒரு காப்பகம் அமைக்க திட்டம் இட்டு, முதலில் 80 பேர் தங்கும் அளவில் ஒரு பெண்கள் பகுதிக்கு அடித்தளம் மாத்திரம் கட்டிய நிலையில், நிதி தட்டுப்பாட்டினால், அப்படியே கிடப்பில் இருக்கிறது.

கிருஷ்ணனின் எல்லை உணவு கொடுப்பதோடு முடிந்து விடவில்லை.இன்னும் பரந்து இருக்கிறது. கேட்பாரற்று இருக்கும் அனாதை பிணங்களுக்கு இறுதி சடங்கு செய்யும் பணியையும் செய்து வருகிறார் கிருஷ்ணன்.பிணத்தை claim செய்து, குளிப்பாட்டி, உரிய முறையில் நல்லடக்கம் தருவதுமாக இருக்கும் இவரை, மதுரை முனிசிபாலிடியில் இருந்தும், பொது மருத்துவமனையில் இருந்தும், இறுதி சடங்கு செய்ய சொல்லி அழைக்கிறார்கள்.

நம் தேசபிதா காந்தியை கதராடை கட்டவைத்து 'மகாத்மா' ஆக காரணமாக இருந்த மதுரையே இவரது மாற்றத்திற்கும் காரணம். இப்படி இப்பட்செய்ய தூண்டியது ? என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு நினைவு கூர்கிறார் "பெங்களூருவில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிந்த நான், வெளிநாடு செல்வதற்கு முன் சொந்த ஊர் மதுரைக்கு வந்தேன். டாக்ஸியில் ஏர்போர்ட் செல்லும் போது மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு முதியவர் தன் மலத்தை தானே உண்ணும் அவலத்தை பார்த்து பதறி அடித்து அருகில் இருந்த ஹோட்டலுக்கு ஓடி, அவருக்கு பத்து இட்லி வாங்கி கொடுத்தேன். அரக்க பரக்க சாப்பிட்டு முடித்த அவர் என்னை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார். அந்த சிரிப்பு தான் என்னை மீண்டும் மீண்டும் செய்ய தூண்டியது, அதன்பின், இத்தகையவர்களுக்கு உணவிடுவதே தன் தொழில் என முடிவு செய்துவிட்டேன்".

இவ்ருக்கு இன்னும் திருமணமாக வில்லை. "நாள் முழுக்க மற்றவர்களுக்கு சமைத்து கொண்டு இருக்கும் என்னை யார் கல்யாணம் செய்து கொள்வார்கள்?" என்று கேட்கிறார்.தன்னை திருமணம் செய்து கொள்பவர்,அவருடைய இந்த வாழ்க்கை முறைக்கு ஒத்து வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.ஆரம்பத்தில் அதிர்ச்சியான இவருடைய பெற்றோர்கள் கூட இப்போது இவருக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள்.


ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பார்த்துக்கொண்டு இருந்த வேலையை விட்டு விட்டு, மனனலம் குன்றியவர்களுக்கு சமையலும், அனாதை பிணங்களுக்கு காரியமும் செய்கிறீர்க்ளே? என்று ஆதங்கப்படுபவர்களுக்கு இவரது பதில், “எனக்கு இது பிடித்து இருக்கிறது”.

இவர் மதுரையில் நடத்திவரும் அக்க்ஷயா ட்ரஸ்ட் சேவைமையத்திற்கு ஏழு வயதாகிறது.

தன் வயிறுபசித்தால் பாலுக்குகூட அழதெரியாத மனநலம் குன்றிய
குழந்தைகளுக்கு தேடிபோய், தானே சமைத்து உணவிடும்
'தாயுமான' கிருஷ்ணனுக்கு, உதவி செய்துவரும் பல கரங்களோடு,
இந்த நன்னாளில் நம் கரங்களையும் இணைப்போம்.
எல்லோருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
ஜெய்ஹிந்த்.


நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஓருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை - ஔவையார்



தகவல்/படங்கள் உதவி:
http://news.rediff.com/slide-show/2009/aug/12/slide-show-1-he-gave-up-a-5-star-job-to-feed-the-mentally-ill.htm
http://www.akshayatrust.org/

பிகு: இந்த கட்டுரையை எழுத தூண்டிய குரு பிரசாத்துக்கும், இதை தமிழில் எழுத உதவிய இரண்டு நண்பர்களுக்கும் என் நன்றி.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
http://idlyvadai.blogspot.com/2009/08/blog-post_15.html
http://edition.cnn.com/2010/LIVING/04/01/cnnheroes.krishnan.hunger/index.html




Sunday, February 7, 2010

மதுரை மற்றும் தமிழ் சினிமா

நீண்ட நாட்களாக நான் இதை பற்றி சிந்தித்து இருக்கிறேன் எனது நன்பர்களுடன் பேசி இருக்கிறேன். இதோ உங்களுக்காக

இப்போது மதுரையை பற்றி தமிழ் சினிமாவில் நீங்கள் அதிகம் பார்க்கலாம்.
முன்பு ஒரு காலத்தில் ஒன்று அல்லது இரண்டு சினிமாவில் மதுரையை பற்றி வரும். ஆனால் இன்று அனைத்து திரைப்படங்களில் நீங்கள மதுரையை பார்க்க முடியும்.

இப்பொழுது மதுரை ஒரு வெற்றிக்கான (sentiment)முறை ஆகிவிட்டது.

முன்பு மக்கள்திலகம் எம் ஜி ஆர் நடிப்பில்
" மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் " ,
"மதுரைவீரன் " ஆகிய படங்கள் வந்தது.


அதற்கு பிறகு அவ்ளோவாக மதுரையை காணமுடியவில்லை.
பின்பு விஜயகாந்த் மற்றும் ராமராஜன் திரைப்படங்களில் மதுரையை பார்த்து இருக்ககூடும். ( அதுவும் ஒன்று இரண்டு பாடல் காட்சிகளில் தான்)

"நேருக்கு நேர் " - மனம்விரும்புதே உன்னை பாடல் - திருமலை நாயகர் மகாலில் படமாக்க பட்டது
"கள்ளழகர் " - விஜயகாந்த் படம்

ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

எனக்கு தெரிந்து விஜய் நடித்த கில்லி திரைபடத்தில் ஒரு காட்சி மதுரை மீனாட்சியம்மன் கோவில் பின்புறம் உள்ள மேற்கு கோபுர வாசலில் படபிடிப்பு நடந்தது.
அந்த படத்தின் அபார வெற்றியை தொடர்ந்து தமிழ் திரையுலகம் மதுரையை நோக்கி புறப்பட்டது.

விஜயின் அடுத்த படத்தின் பெயர் " மதுர" ( படத்துக்கு பெயரில் மதுரை என்று வைத்தால் இன்னும் நன்றாக ஓடும் என்று அவர்கள் நினைத்து இருக்கலாம்)
அதே கில்லி திரைப்படம் காட்சி படமாக்கப்பட்ட இடத்தில் எடுத்தார்கள் ஆனால் படம் தான் திரையரங்கை விட்டு வேகமாக வெளிய ஓடியது.

அஜித் ரசிகர்களுக்கும் - "ரெட்" என்ற ஒரு திரைப்படம் மதுரையை மையமாக வைத்து எடுத்த படம்.
( ஆனால் மதுரையில் ஒரு காட்சி கூட படமாக்க படவில்லை .....அது ...... அந்த படத்தை தோல்வியை சந்திக்க செய்தது..)

இதற்கு இடையில் " காதல் " என்ற திரைப்படம் முழுக்க முழுக்க மதுரையில் படமாக்கப்பட்டது.
காதல் படப்பிடிப்பின் மக்கள் யாரும் நின்று வேடிக்கை கூட பார்க்கவில்லை. அப்போதுதான் பாரத் திரைக்கு வந்த புதிது. சந்தியா அந்த படத்தில் தான் அறிமுகம்.
இயக்குனர் பாலாஜி சக்திவேல்க்கு இரெண்டாம் படம்.
படம் வெளியான பிறகு அனைத்து திரை அரங்கில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பிறகு விஷால் நடித்த "திமிரு" படம் மதுரையில் எடுத்து வெற்றி பெற்ற படம் என்ற பெயர் பெற்றது.

"வேட்டையாடு விளையாடு " திரைபடத்தில் கூட மதுரையில் பிரகாஷ் ராஜ் வாழ்ந்தது போல் கட்டி கமல் மதுரை விமான நிலையத்தில் வந்து இறங்குவது போல் ஒரு காட்சி வரும்.
இயக்குனர் சேரனின் " தவமாய் தவமிருந்து"

"சுப்ரமணியபுரம் " படம் வந்த பிறகு
அந்த மதுரை அலை பண்மடங்கு உயர்த்து.


"வெண்ணிலா கபடி குழு "






"மாயாண்டி குடும்பத்தினர்"
"மதுரை டு தேனி வழி ஆண்டிப்பட்டி"
"மதுரை சம்பவம்"
"மாமதுரை"

தற்போதைய "கோவா" திரைபடத்தில் கூட மதுரைக்கு ஒரு இடம் உண்டு.

இதை தவிர இன்னும் வரவிருக்கும் படங்களான
"துங்கா நகரம்"
மாட்டுத்தாவணி"
"கோரிப்பாளையம்"
இவை மதுரையில் உள்ள இடங்களின் பெயர் -- வரவிருக்கும் புதிய திரைபடத்தின் பெயர்


திரைப்பட பாடல்களில் கூட மதுரையை நீங்கள் பார்க்கலாம்.

மதுரை மரிகொளுந்து வாசம் - எங்க ஊர் பாட்டுக்காரன்
தென்மதுரை வைகை நதி - தர்மத்தின் தலைவன்
மதுரைக்கு போகாதடி - அழகிய தமிழ் மகன்
மதுரை குலுங்க குலுங்க - சுப்ரமணியபுரம்

மணிரத்னம் தனது படங்களில் ஒரு சில காட்சிகளில் மதுரையை பார்க்கலாம்

இருவர் - திருமலை நாயகர் மஹால் மற்றும் காந்தி அருங்காட்சியகம்



பம்பாய் - கன்னாலனே பாடல் - திருமலை நாயகர் மஹால்


குரு - திருமலை நாயகர் மஹால்

எந்த ஒரு படமா இருக்கட்டும் அதன் வெற்றியை தீர்மானிப்பது மதுரை தான்.
மதுரையில் ஓடினால் அனைத்து இடங்களில் ஓடும்.

மதுரையில் இருந்து சினிமாவில் சாதனை புரிந்தவர்கள் பலர்.
அவர்கள் யார் என்று பார்போம்

எம் எஸ் சுப்புலக்ஷ்மி
இளையராஜா ( பன்னையபுரம் , தேனி)
விஜயகாந்த்
வடிவேலு
விவேக்
கனிகா
சாலமன் பாப்பையா
ராஜா - பட்டிமன்ற பேச்சாளர்
பரவை முனியம்மா

இயக்குனர்கள்
மணிரத்னம்
பாரதிராஜா - ( தேனி ஒரு காலத்தில் மதுரை மாவட்டத்தில் தான் இருந்தது )
பாலா
சேரன்
அமீர்
சசிகுமார்
சிம்புதேவன்

Thursday, February 4, 2010

மதுரைக்கு புதிது

அண்மையில் மதுரையில் பல புதிய கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மதுரைக்கு இந்த கடைகள் புதிது ஆனால் இவர்கள் பல காலமாக சென்னை மற்றும் பிற நகரங்களில் உள்ளனர்.

போத்திஸ் - ஜவளிகடை


ஜாய் ஆலுக்காஸ்



பீமா

ஆலுக்காஸ் (ஜோஸ்)
லலிதா

கீர்த்திலால்ஸ்



வியாபாரத்தில் பலமுனை போட்டி உருவாகிஉள்ளது.
இதன் காரணமாக வாடிக்கையாளர்களை கவரும் விதமாக தள்ளுபடி அள்ளிதருகின்றனர்.

முன்பு ஒரு களத்தில் மதுரையில் மக்கள் இவ்ளோ செலவு செய்யமாட்டர்கள் . ஆனால் இன்று அதையும் மாற்றி காட்ட பலபுதிய கடைகள் வந்த வண்ணம் உள்ளனர்.

பொங்கலை ஒட்டி போத்திஸ் செய்த அலங்கரஅணிவகுப்பு இங்கே




உழவர் திருநாள் பொங்கல். அதை இப்போது யாரும் நினைத்து கூட பார்ப்பது இல்லை. அப்படி இருக்கும் நேரத்தில் போத்திஸ் நிறுவனத்தினர் இந்த சிறப்பு அலங்காரம் செய்து மக்கள் அனைவரையும் ஈர்த்தனர்.

Sunday, January 31, 2010

அசல் ஒலிநாடா வெளியீடு


மதுரையில் அசல் ஒலிநாடா (Audio Cassette) வெளியீடு அன்று எடுத்த புகைப்படங்கள்.
கீஷ்டுகானம் .. மதுரை பெரியார் நிலையம் வர்த்தக வளாகத்தில் உள்ள ஒரு ஒலிநாடா கடை. பல ஆண்டுகாலமாக இந்த கடை உள்ளது. மற்ற கடைகளில் விட இங்கு விலை குறைவு என்று சொல்ல முடியாது இருப்பினும். இவர்கள் இங்கு தவிர டவுன் ஹல்ல ரோடு மற்றும் கோரிப்பாளையம் ஆகிய இடங்களில் கடை திறந்து உள்ளனர்.

அசல் பாடல் சொல்லும்படியாக இல்லை. :( அதனால் தான் கீஷ்டுகானம் பற்றி இங்கு குறுப்பிடபட்டுள்ளது.



பின்குறிப்பு : 'தல'க்கு மதுரையில் ரசிகர்கள் அதிகம்.

Saturday, January 30, 2010

தமிழ் படம்

மதுரையை சேர்த்த ஒருவர் திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அவர் வேற யாரும் இல்லை. அண்ணன் அழகிரி அவர்களின் புதல்வன் தயாநிதி அழகிரி தான்.
அவர் வாரணம் ஆயிரம் படத்துக்கு விநியோக உரிமம் பெற்று இருந்தார்.
இது அவரது முதல் தயாரிப்பு.
நேற்று படம் வெளியானது . அவர் மற்றும் தமிழ் படத்தின் குழுவினருக்கு நமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். படம் வெற்றிபெருமா என்று பொறுத்த இருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆனால் இந்த வித்யாசமான முயற்சிக்கு நாம் அவர்களை பாராட்ட வேண்டும்.

மதுரையில் திருவிழா


அண்ணன் அழகிரி அவர்களின் 59வது பிறந்தநாள் இன்று.
அவர் வாழ்க பல்லாண்டு. அவரது சேவை மதுரைக்கு தேவை.
நமது சார்பாக அண்ணன் அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

மதுரை திருவிழா போல் காட்சி அளிக்கிறது.
எங்கு பார்த்தாலும் வாழ்த்து போஸ்டர்கள், பேனர்கள், தோரணம்.

சில புகைப்படங்கள்





தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேல் எழுதிய, "அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை' புத்தக வெளியீட்டு விழா, மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று நடந்தது.





நன்றி : http://www.mkalagiri.com/