Tuesday, November 30, 2010

அஜித் ஹிட் பாடல்கள் !!

அஜித் ஹிட் பாடல்கள் என்று யூடுயூப்இல் தேடினால் ஒண்ணுமே வரல. அது ஏன் என்று எல்லாருக்குமே தெரியும். அஜித்க்கும் பாடல்களுக்கும் ஏழாம் பொருத்தம். அஜித்க்கு ஏ அர் ரகுமான் இசையமைத்தால் கூட பாடல்கள் தேற மறுக்கின்றனர். அது ஏன் என்று தான் தெரியவில்லை.  இத்தனைக்கு விஜய்க்கு எந்த இசை அமைப்பாளர் பாடல் போட்டாலும் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் வண்ணம் நன்கு அமைந்து விடுகிறது. பாடல்கள் நன்றாக இல்லை என்றால் கூட அவர் நடனத்தில் பாடல்கள் ஹிட் ஆகும் வாய்ப்பு இருக்கிறது .அது அவருடையோ அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.  அந்த வாய்ப்பு இங்கு இல்லை. அது மட்டும் இல்லை நல்ல பாடல்கள் கூட இவர்க்கு நடனம் நன்கு வராது என்று சுமார் என்று ஆன பாடல்கள் உண்டு . ஒரு படத்தின் வெற்றியை பாடல்கள் தீர்மானிப்பதை இங்கு நீங்கள் காணலாம்.
விஜய் ஹிட் பாடல்கள் என்றால் ஒரு 50 முதல் 100 பாடல்கள் வந்து நிற்கும். இதுவே அஜித் என்பதால் 10 பாடல்கள் தேடுவதற்கு ஒரு மணி நேரம் ஆகி விட்டது. இதோ எனக்கு பிடித்த அஜித்இன் ஹிட் பாடல்கள் ( நான் கேட்கும் பாடல்கள் என்று கூட சொல்லலாம் )

பில்லா - சேவல் கொடி


உல்லாசம் - யாரோ யார் யாரோ


தீனா படத்தின் பாடல்கள் - வத்தி குச்சி


அமர்க்களம் பாடல்கள் - மேகங்கள் என்னை தொட்டு


வில்லன் - ஒரே மணம்


முகவரி - ஏ நிலவே


ரெட் - கண்ணை கசக்கும் சூரியனோ


கிரிடம் - கனவெல்லாம் பலிக்குதே


கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - சந்தன தென்றலை


ஆசை - கொஞ்ச நாள் பொறு தலைவா


காதல் கோட்டை - நலம் நலமறிய ஆவல்


காதல் மன்னன் பாடல்கள் - உன்னை பார்த்த பின்பு நான்


இதில் எதாவது பாடல்கள் விட பட்டு இருந்தால் பின்னூட்டம் போடவும்.

Tuesday, November 23, 2010

நந்தலாலா - இது ஒரு மிஷ்கின் படம்

நந்தலாலா ... இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவர வேண்டிய திரைப்படம். இப்போது தான் திரைக்கு வருகிறது. மிஷ்கின் மிக நல்ல டைரக்டர் என்று சொல்லுவதற்கு முன் .. அவர் எடுத்த இரண்டு படம் மிக பெரிய ஹிட .. முதல் படம் சித்திரம் பேசுதடி. இரண்டவது அஞ்சாதே .. அவருடைய திரைக்கதை மற்றும் காட்சி அமைப்பு மிக அருமையாக இருக்கும். இளையராஜா இசை வேற.. திரை அரங்கம் வந்து படம் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த படம்.
சென்ற வாரம் இவர் ஒரு சர்ச்சையில் சிக்கினர். உதவி இயக்குனரை பற்றி தவறாக பேசினார் என்பது தான். ஏற்கனவே கேபிள் சங்கர் சொன்னது போல அவர் சொன்னதில் தப்பு இல்லை, சொன்ன விடம் தான் தவறு.

மிஷ்கின் பற்றி சிறு செய்திகள் .
இயக்குனர் அவதற்கு முன் 72 வேலை செய்துள்ளார்.
கடைசியாக லேண்ட்மார்க் - புத்தக கடையில் வேலை பார்க்கும் பொது இயக்குனர் கதிர் ( அதாங்க நம்ம காதலர் தினம், காதல் தேசம படைப்பாளி ) கிட்ட நிறைய புத்தங்களை எடுத்து கொடுத்து , இது படிங்க அது படிங்க என்று சொல்லி, அப்புறம் உதவி இயக்குனராக பணிக்கு சேர்ந்தார்.
புத்தகம் படிக்கும் ஆர்வலர். நாவல் படிப்பது போன்று இவரது படங்கள் இருக்கும்.
வாழ்வில் நெளிவு சுழிவு பார்த்தவர். பேச்சு மிக ஜாஸ்தி , மத்தபடி அவரிடம் சரக்கு இருக்கிறது.
உதவி இயக்குனராக ஒரு திருநங்கை சேர்த்து உள்ளார் என்பது ஒரு கொசுறு தகவல். உலக தரத்துக்கு படத்தை கொடுக்க வல்லவர்.
கதிர்டம் வேலை செய்யும் போது தான் கானா உலகநாதன் அங்கு கதிரிடம் வாய்ப்பு கேட்டு பாடி இருக்கிறார். அவரை சித்திரம் பெசுதடியில் உபயோக படுத்தி இருப்பார்.
அவரே வருத்த பட்டு கூறிய விஷயம் - " என்னை குத்து பாட்டு ச்பெசியாளிஸ்ட் என்று சொல்லி விட்டனர் " காரணம் வாழமீனு மற்றும் கத்தால கண்ணால பாடல்கள் தான்.
அஞ்சாதே படம் டைட்டில் போடும் அழகே தனி .. அதை பார்த்தே நான் இவரது ரசிகன் ஆனேன்.

Friday, November 19, 2010

நம்ம கோவில் தான் !!!!

Thursday, November 11, 2010

இன்னுமா இந்த உலகம் நம்புது..

ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி முன்பே எழுத வேண்டும் என்று நினைத்தேன். இப்போது பிரச்சனை மிக பிரமாண்டமாக வெடித்து இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் அப்படி என்றால் என்ன ? என்று கூட சில பேர் கேட்பார்கள. ஒன் இல்லை ரெண்டு இல்லை 1,76,00,000  கோடி ரூபாய் ஊழல். யார் பணம் இது எல்லாம் மக்கள் பணம். யார் வந்து கேட்க போறாங்க ? என்ற அலட்சிய போக்கில் அடித்த கொள்ளை.
 1,76,00,000 கோடி - 17,60,00,00,00,00,000 முடியல . பார்போம் எதிர் கட்சிகள் ஒரே முடிவாக உள்ளனர்.

அதாவதுமுன்பு எல்லாம் ஊழல் என்பது எதோ சில கோடிகளில் நடக்கும் இப்போது எல்லாம் ஆயிரம், லட்சம் கோடி ஊழல் வந்து விட்டது.

மக்கள் பணத்தை எப்படி எல்லாம் சுருட்டலாம் என்று திட்டம் தீட்டி செயல்படுகின்றனர். இதில் ஒரு பகுதியை மக்களுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தால் நாடு எங்கயோ போய் இருக்கும். ( முதல்வன் பட வசனம் தான் )


கிரிகெட் ல  ஊழல்,  தடகள போட்டிகளில் ஊழல் ( காமண் விலத் போட்டி) , வீடு கட்டினா ஊழல் ( அதர்ஸ் வீடு வசதி ) , பாலம் கட்டின ஊழல், வெள்ள நிவரனத்து, சுடுகாட்டு கூரை வரைக்கும்  ஊழல் நிறைந்த நாடாக் இந்திய இன்று இருக்கிறது. மிகவும் வேதனை பட வேண்டிய நேரம்.
இந்தியா பற்று விக்கிபீடியா  வில் படித்தால்

" Since the introduction of market-based economic reforms in 1991, India has become one of the fastest growing major economies in the world;[20] however, the country continues to face several poverty, illiteracy, corruption and public health related challenges"

ஏழ்மையை  ஒழிக்க தான் அரசாங்கம் இருக்கிறது என்று நினைத்தால், அந்த அரசாங்கம் தான் ஊழல் செய்கிறது. இதை இப்படியேவிட்டால் எங்கு சென்று முடியும் என்று தெரியவில்லை. சட்டத்தை கடுமையாக்க வேண்டும். ஊழல் செய்தால் என்ன செய்ய முடியும், நம்ம வேற நாட்டுக்கு சென்று விடலாம் , நல்ல வாழ்கை வாழலாம் என்ற அவர்களது எண்ணத்தை ஒழிக்க வேண்டும். மிக கடுமையான தண்டனை தர வேண்டும், அவர்களுக்கு  உரிமை அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.

இப்போது தான் புதிதாக தொடங்க பட்ட மாநிலம் ஜார்கண்ட் அங்கேயே ஒரு முதல்வர் 500  கோடி அடித்தார் என்றால்  , தமிழ்நாடு பல வருடமாக இருக்கிறது , இங்கு பல பேர் , பல முறை முதல்வராக இருந்து உள்ளனர் என்றால் யோசித்து பாருங்கள்.

போன வாரம்அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியா வந்தார். அவர் அவரது மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து நடனம் ஆடினர், பார்க்கவே ஆனந்தமாக இருந்தது. நம்ம நாட்ல பிரதமரோ அல்லது எதாவது ஒரு முதல்வர்  நடனம் ஆடும வயதில் இருகிறாரா ? இன்னுமும் தள்ளு வண்டியில் வந்து நாட்டை காப்பாற்ற தான் வேண்டுமா ?
 







அமெரிக்க பிரதமர் ( அமெரிக்க ல பிரதமர் இல்லை என்று சொல்லாதிங்க ) , இங்கிலாந்து பிரதமர், மற்றும் இந்தியா பிரதமர் கடவுளிடம் சென்று எங்கள் நாடு எப்போது முன்னேறும் என்று கேட்டார்கள் .. இந்த நகைச்சுவையை அனைவரும் படித்து இருப்போம் அல்லது கேட்டு சிரித்து இருப்போம். சிரிக்க மட்டும் இல்லை சிந்திக்கவும் செய்ய வேண்டும், அதை கேட்கையில் எண் மணம் வேதனைபடுகிறது.

இனியாவது இருந்துங்கள் மக்களே.

Friday, November 5, 2010

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!

உலகில் அனைத்து நாடுகளில் இருக்கும் நமது தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தீபாவளி என்றாலே எண்ணெய் தேய்த்து குளித்தல்,புத்தாடைகள் பட்டாசு, நல்ல பலகாரம் . உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுடன் சிரித்து மகிழ்ந்து கொண்டாடுவது தீபாவளி.

தீபாவளி முந்திய நாள் இரவு கடை வீதி செல்தல் .( எதோ Benz கார் 10 ரூபாய்க்கு வாங்குவதாக நினைப்பது )
 பட்டாசு வெடித்தல், அதில் பக்கத்துக்கு வீடுகளோடு போட்டு போடுதல், யார் வீட்டில் அதிக குப்பை இருக்கிறது என்று பார்த்தல்.
 சாலமன் பாப்பையா பட்டி மன்றம் , சன் டிவி கலைஞர் டிவி சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்தல், புதிய படத்திற்கு செல்தல், கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசித்ததல்....  இந்த வருடம் விஜய் படம் வரவில்லை அதனால் தீபாவளியை புறக்கணிக்குறோம்   என்று போஸ்டர் ஓட்டுவதையே தொழிலாக கொண்டு சிலர் செயல் படுவார்கள் .

Thursday, October 28, 2010

எந்திரன் - வியாபார விபரம்

எந்திரன் வெளிவந்து முதல் 3 வாரங்களில் இந்தியாவின் அனைத்து வசூல் சாதனைகளை உடைத்து விட்டது என்பது பழைய செய்தி. எந்திரன் திரைப்படம் ஏன் எவ்ளோ மற்றும் எப்படி இவ்வளவு லாபம் வரும்அதை பற்றி பார்போம். முதல் மூன்று வாரங்களில் வசூல் மட்டும் 225 கோடி என்று சொல்லுகிறார்கள். படத்தின் மொத்தம் செலவு 150 கோடி என்றும் சொல்லி விட்டார்கள். எங்கே இப்பவே லாபம் பாத்தாச்சு. ஆனால் ரஜினி சொல்லுற மாதிரி "இனி தான் ஆரம்பம் " என்று கூட சொல்லலாம்.

சன் டிவி எப்படி ஓடுகிறது ? மெகா தொடர்கள், உலக தொலைகாட்சிகளில் முதல் முறையாக என்று சொல்லி போடும் திரைப்படங்களால் தான். எப்பவுமே சன் டிவி நல்லா படங்களை 10 கோடி முதல் 15 கோடி செலவு செய்து தயாரிப்பாளரிடம் வாங்கி கொள்ளும். அப்புறம் தீபாவளி நன்னாளில் இந்த படத்தை போட்டு அதில் வரும் விளம்பரத்தின்  மூலம் காசு பார்க்கும். நல்லா திரைப்படம் என்றால் முதல் முறையே அதிக விளம்பரம் வரும். அப்படியே அதில் நல்லா லாபம் , இது போக மறுமுறை ஒளிபரப்பும் போதும் விளம்பரம் வரும். இப்படி சன் டிவி ஒரு படத்தை வைத்து திரை கொண்டாட்டம் ,காமெடி டைம், புது பாடல்கள் , டாப் 10 பாடல்கள், டாப் 10  படங்கள் என்று பல ப்ரோக்ராம் தயார் செய்ய படுகிறது.

 இப்படி எப்பவுமே இன்னோருதனை (சினிமா காரனை) நம்பி தான் சன் டிவி ஓடுது . அதனால் ஏன் நம்மாலே படம் எடுக்க கூடாது என்று எடுக்க ஆரம்பித்த சன் டிவி. இதனால் அவர்கள் நடத்தும் 43 எப் எம் ரேடியோ, 2  தினசரி , 2 வார இதழ்கள் என்று எல்லாத்துக்கும் தீனி வழங்குகிறது. இது ஒரு வகையில் நல்ல மார்க்கெட்டிங் தந்திரமும் கூட .
எந்திரன்  பாடல் வெளியீடு -8 மணி நேரம்
எந்திரன் முன்னோட்டம் ( Trailer ) வெளியீட்டு விழா - 6 மணி நேரம்
வீடியோ பாடல் வெளியீடு ( இது யாரு கண்டு பிடிச்சாங்கன்னு தெரியல ) - 4 மணி நேரம்
எந்திரன் படம் எடுத்த விதம் ( Making of Endhiran சிவாஜி படத்துக்கு 5 நாள்.. தினமும் ஒரு மணி நேரம் போட்டாங்க .. இதுக்கு அத விட நிறைய நேரம் இருக்கும்) - 10 மணி நேரம்
100 நாள் விழா- 4 மணி நேரம்
500 நாள் விழா -  எப்படியும் ஒட்டிடுவங்க அதுக்கு ஒரு விழா - 8 மணி நேரம் 
உலகமெங்கும் எந்திரன் - 8 மணி நேரம்
இது எல்லாம் போக எந்திரன் படத்தை 2014 தீபாவளிக்கு போடுரப்ப இருக்கு பாருங்க விளம்பரம் .. 4 மணி நேரம்
இப்படி மொத்தமாக இவர்கள் 52 மணி நேரத்துக்கான சன் டிவி பிராய்ம் டைம் ( Prime Time )  அதிக TRP உள்ள ப்ரோக்ராம்களை ரெடி செய்து விட்டனர்.
ஒரு படத்தை விளம்பரத்தோட 3 மணி நேரம் சன் டிவி ஒளிபரப்பும். ( சில காட்சிகளை கத்தரித்து ) அப்படி பார்த்த எந்திரன் மூலம் திரை 17 படத்துக்கு இணையான வசூலை செய்து உள்ளனர் ( ஒரே ஒரு முதலீட்டில்) 17 * 3 = 51 மணி நேரம்.
ஒரு மணி நேரத்துக்கு சன் டிவியில் எவ்ளோ விளம்பரம் வரும் என்று யாராவது கணக்கிட்டு உள்ளார்களா ?
15 நிமிடத்துக்கு ஒரு 5 நிமிடம் என்று வைத்து கொண்டால் ஒரு மணி நேரத்துக்கு 15 நிமிடம் வரை விளம்பரம் போடா முடியும்.
15 * 20 லட்சம் ( ஒரு 30 வினாடி ஓடும விளம்பரம் 10 லட்சம் என்று கணக்கு .. இது கம்மி தான் .. ஒரு கணக்கு க்கு தான் ) = 300 லட்சம் = 3 கோடி .
52 மணி நேரம் *  3 கோடி  = 150 கோடி  ( வெறும் சன் டிவி மட்டும்)
திரை படம் 50 நாள் முடிவில் எப்படியும் 300 கோடி வசூலை தொட்டு விடும்.
டிவி வருமானம் - 150 கோடி ( சன் மட்டும் )
உசே , தேஜா , எப் எம் , பேப்பர் , நாளிதழ் இதர வருமானம் - 40 கோடி
ஆடியோ தகடு விற்பனை - 10 கோடி

அப்படி இப்படின்னு ஒரு 150 கோடி ரூபாய் முதலீட்டில் 500  கோடி வரை வியாபாரம் செய்து உள்ளனர்.  இதுக்கு நம்ம அண்ணே கேபிள் சங்கர் தான் பதில் சொல்லணும் ..இது சத்தியமா இல்லை இதை விட கூடவே வருமா ? இது வேற யாராலும் சத்தியம் இல்லை.  ஏவிஎம் கூட படம் எடுத்த இந்த அளவுக்கு அதை காசாக்கி இருக்க முடியாது.  இது போதாததுக்கு எந்திரன் படத்தில் ரஜினி உபயோகித்த உடைகளை ஏலம் விட போவதாக  கூட செய்திகள் வருது.
புதுமையாக எதாவது செய்யணும் என்றால் ... ஜுரச்சிக் பார்க் படத்துக்கு போட்ட செட் இன்னும் பத்திரமாக வைத்து அதுக்கு ஒரு நுழைவு கட்டணம் போட்டு கண்காட்சிக்கு வைத்து உள்ளனர். நம்ம ஊர்ல கூட இந்த மாதிரி செய்யலாம் ஆனால்இடம் தான் இல்லை.வெளிநாடுகளில் இந்த வசதி உண்டு.
எந்திரன் கதை என்னோடதுஎன்று கடந்த நாலு நாட்களாக செய்து வந்த வண்ணம் உள்ளது. சன் தரப்பில் அல்லது ஷங்கர் தரப்பில் இருந்து எந்த பதிலையும் காணூம்... :)

கடைசில  காலியானது நம்ம பாக்கெட் தான் ....

Wednesday, October 20, 2010

விளம்பர இடைவேளிக்கு பிறகு தொடரும் ..

நேற்று நீண்ட நாட்களுக்கு பிறகு தொலைகாட்சி பார்க்க நேர்ந்தது. அரை மணி நேரம் கூட பார்க்கவில்லை அதற்குள் ஒரு 30 விளம்பரம்.  இது தீபாவளி நேரம் வேற .. ஒரே விளம்பரம் தான்

 அந்த எல்லா விளம்பரத்திலும் ஒரு சினிமா நட்சத்திரம். இதோ அந்த லிஸ்ட்


ஆச்சி மசாலா - தேவயாணி
ஆலுக்காஸ் - மாதவன் , விஜய்,சரத்குமார் ( தனி தனியே தான்.. இன்னும் சேர்ந்து வர மாதிரி எடுத்த ஒரு நிறுவனம் சரவணா மட்டுமே )
வீராஸ் - வ.பேட்டை - பாக்யராஜ்
ஸ்ரீ குமரன் தங்க மாளிகை  - ராதிகா
அக்சர் பெயிண்ட் - சந்தானம்
அல்ட்ர க்ரிண்டர்  - தேவயாணி
சென்னை சில்க்ஸ் - அனுஷ்கா
சரவணா ஸ்டோர்ஸ் - சூரியா
ஜெயச்சந்திரன் - சாயா சிங் , பூர்ணா ஸ்ரீ
எதோ ஒரு நகை கடை விளமபரம் - பத்மா பிரியா
போதிஸ் - நயன்தாரா
சாரதி வேஷ்டி - பிரசன்னா
கல்யாண சாரீஸ் - ஸ்ரேயா
தங்க மயில் - நதியா
ஸ்ரீ தேவி டேக்ஸ்டிலே - பாவனா
யுனிவர்சல் மொபைல் - மாதவன் 

இப்படி ஒரே சினிமாகரங்களா வரங்க. ஒரு விளம்பரம் எதுக்கு அவங்க பொருள் நல்லா இருக்கு நு விளம்பரபடுத்த. சினிமா கரங்க நிறைய வருவதினால் பொருள் மீது போக வேண்டிய கவனம் அவர்கள் மீது போகிறது.  Branding , Star value  எல்லாம் ஒகே . ஆனால் இங்கே அதன் முக்கிய காரணத்தை தவற விட்டார்களோ  என்ற ஒரு எண்ணம்.
இன்றைய உலகத்தில் விளம்பரம் முக்கியம் தான் அதே சமயம் ஒரு தரம் குறைந்த பொருள் பெரிய நடிகர் மூலம் விளம்பரம் செய்து விற்க முடியாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரே நடிகர் பல விளம்பரத்தில் வந்தால் ரசிகர்கள் குழப்பம் ஏற்படும். ஒரு காலத்தில் விளம்பரத்திற்காக நான் டிவி பார்ப்பது உண்டு ஆனால் இன்று அது அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு என்ற போக்கில் போய் கொண்டு இருக்கிறது . விளம்பரம் செய்து விற்பனை கூட்டினார்களோ இல்லையோ ஆனால் போட்டி காரணமாக அதை செய்ய வேண்டி உள்ளது . கடைசியில் லாபம் யாருக்கு டிவி உரிமையாளர்க்கு  தான். யாருக்கு என்று எல்லாருக்கும் தெரியும்.

நல்லா விளம்பரம் என்பது எப்பவுமே போட்டலும்  பார்க்கலாம் அந்த மாதிரி எடுக்கணும். இதோ ஒரு பொங்கல் ஆசியன் பெயிண்ட் விளம்பரம்.




இந்த விஜய் விளம்பரம் சமீபத்தில் பார்த்தேன் ...பார்த்து ரொம்ப  பீலிங் .. எப்படி எல்லாம் விளம்பரம் எடுக்குக்ரங்கா நு தான் .. இது என்ன படமா ??



ராஜீவ் மேனன் இருந்த நேரம் மிக அருமையாக இருக்கும்.தற்போது அதன் தரம் குறைந்து விட்டது என்பது தான் எனது வாதம்.
ஒரு நடிகரை வைத்து விளம்பரம் எடுப்பது என்பது படம் எடுப்பதற்கு சமம. அவர் நல்லா மவுசு இருந்தால் நன்றாக வரும் , அவர் சரி இல்லை என்றால் இவர்கள் விளம்பரம் , வர்த்தகம் எல்லாம் பாதிக்கும். சக்தி ஊறுகாய் மற்றும் ராஜ்மஹால் விளம்பரம் இங்கே சொல்ல வேண்டும் அவர்கள் தமன்னாவை வைத்து முன்பே விளம்பரம் எடுத்தார்கள்அப்போது அவர் சினிமாவில் இல்லை , இப்போது மிக பெரிய நடிகை.


விளம்பரம் எனக்கு ரொம்ப பிடிக்கும் , தற்போது இந்த விளம்பரம் பார்க்க நேரிட்டது . மிக அருமை , அற்புதம்.



இதை இரண்டு பாகமாக எடுத்து உள்ளனர். கடைசியில் சேர்த்தார்களா இல்லையா என்பது எடுத்த பாகம் ? அதை யாராவது பார்த்தல் எனக்கு சொல்லுங்களேன்.