Friday, January 7, 2011

புது வருட வாழ்த்துக்கள் !!!

இது தமிழ் புத்தாண்டு இல்லை. ஆங்கில புத்தாண்டு. இருப்பினும் புது வருட வாழ்த்துக்கள் ( புத்தாண்டு என்று தமிழ் புத்தாண்டை சொல்வதுண்டு அதலால் .. புது வருடம்.)

இந்த புது வருட கொண்டாட்டங்கள் நடப்பது உண்டு. நான் இதற்கு செல்வது கிடையாது இருப்பினும் ஒரு முறை என்ன தான் இருக்கிறது பார்போம் என்று சென்ற கதையை இங்கு சொல்கிறேன். இந்த கதையில் வரும் அனைத்தும் உண்மையே. கற்பனை அல்ல.

2008 புது வருட கொண்டாட்டம். நான் அப்போது சென்னையில் இருந்தேன். நான் அங்கு ஒரு மேன்போரும் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு இருந்தேன். அடுத்த வருடம் இங்கு இருக்க போவது இல்லை என்ற நிலையில் இந்த புது வருட கொண்டாட்டம் நன்கு அமைய வேண்டும் என்று நண்பர்களிடம் கூறினேன். எனது நண்பர் ஒருவர் அப்போது சிங்கப்பூரில் இருந்து வேற வந்து இருந்தார். அவர் அவரது நண்பர்களோடு ஒரு பெரிய ஹோட்டல் ஒன்றுக்கு செல்ல போவதாக கூறினர்.நானும் வரேன் என்று சொல்லி அவருடன் சேர்ந்தேன். அதுக்கு 750 ரூபாய் செலவு ஆகும் என்று கூறினர் பரவா இல்லை பாத்துக்கலாம் என்று சொல்லி சம்மதித்தேன். டிக்கெட் கிடைப்பதே அரிது பார்போம் என்றனர். நானும் எப்படியாவது போய் விட வேண்டும் என்று விரும்பினேன்.

அம்பச்சடோர் பல்லவா என்று ஒரு ஹோட்டல் முடிவு செய்தனர். அங்கு ஒரு பாஷின் ஷோ வேற இருப்பதாக கூறினர் நண்பர். ஒரே மகிழ்ச்சியில் சாயந்தரம் 6 மணிக்கே வேளச்சேரியில் இருக்கும் எங்கள் வீட்டில் இருந்து வண்டியில் புறப்பட்டு சென்றோம் சென்றோம் 7 30 மணிக்கு தான் அங்கு சென்று அடைந்தோம். அட ரொம்ப நேரம் ஆச்சு . எல்லாம் முடிஞ்சி போய் இருக்கும் என்று நினைத்து கொண்டு உள்ளே சென்றோம். உள்ளே வெகு சிலரே இருந்தனர். நமது நண்பர்கள் இருந்தார்கள் என்ன என்று விசாரித்தால் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை என்றனர். ஒரே சந்தோசம் நம்ம எதையும் தவறவில்லை என்று நினைத்து கொண்டோம்.

நேரம் போக போக கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் ( ஆண்கள் ) வந்தனர். சரி பேஷன் ஷோ அரம்பிக்கட்டம் என்று இருந்தோம். ஆரம்பித்தது அதுவுமே சரி இல்லை. ஏன்டா வந்தோம் என்று ஆனது.இரவு உணவு உண்டு என்று வேற கூறினர் அதனால் பொறுமையாக இருந்தோம். உணவு இடைவேளி வந்தது வெறும் ஒரு சமோசா மற்றும் பெப்சி கொடுத்தனர். அசைவ பிரியர்களுக்கு இதோ இருந்தது. நான் சைவம் என்பதால் அதுவும் போச்சு. பின்னர் உள்ளே வந்தோம், பாடல்கள் போட்டு நடனம் ஆட கூறினர். நம் மக்கள் எல்லாம் சும்மா நின்று கொண்டு இருந்தோம். பிறகு ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து வெளியே போய் விடலாம் என்று முடிவெடுத்து நண்பர்களிடம் கூறினேன். எல்லாரும் ஒருமித்த கருத்தாக போகலாம் என்று கூறினர் என்று பார்த்து கொள்ளுங்கள் எவ்ளோ மோசம் என்று. நண்பன் ஒருவன் கூறினான் மெரினா கடற்கரை கூட நன்காக இருக்கும் அங்கு போகலாம் என்று சொன்னான்.

சரி புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் இங்கு இருக்க வேண்டாம் என்று முடிவு செய்து எல்லாரும் கிளம்பினோம். நான் வண்டியில் வந்து இருந்தேன் , மற்ற நண்பர்கள் காரில் வந்து இருந்தனர். அவர்கள் புறப்பட்டு சென்றனர் நான் அவர்களை பின் தொடர்ந்தேன் ஒரு இரண்டு அடி சென்ற பின் எனது பின் சக்கரம் பஞ்ச்ர். கிழே இறங்கி நின்று பார்த்தால் புத்தாண்டு பிறந்தது எல்லாரும் வாகனத்தில் படு வேகமாக சென்றனர். நான் நடு தெருவில் வண்டி பஞ்சர் ஆகி நின்று கொண்டு இருந்தேன். பின்பு மவுண்ட் ரோட்டில் ஒரு கடையில் பஞ்சர் சரி செய்து ( அதற்கு சுமார் 500 ரூபாய் செலவு செய்தேன்..) இரவு 2 மணிக்கு பஞ்சர் பார்த்ததே பெரிய விஷயம். பேரம் பேசினேன் முடியாது என்று சொல்லி விட்டனர் வேறு வழி இன்றி சரி செய்து வீட்டுக்கு வரும் வழியில் போலீஸ் பிடித்து எதோ அவர்கள் பங்குக்கு எதோ என்னிடம் வாங்கினர். பிறகு வீடு வந்து சேரும் போது மணி அதிகாலை 4:15 இருக்கும்.

கிட்டத்தட்ட 1500 ரூபாய் வரையில் செலவு செய்து அலைந்தது தான் மிச்சம். உருப்படியாக ஒன்னும் நடக்கவில்லை.

0 comments:

Post a Comment